சி.பி.அய். விசாரணைக்கான ஒப்புதலை திரும்பப் பெற்றதில் தவறில்லை: மல்லிகார்ஜுன கார்கே

viduthalai
1 Min Read

பெங்களுரு, அக்.1– சிபிஅய் விசாரணைக்காக அளிக்கப்பட்டிருந்த ஒப்புதலை கருநாடக அரசு திரும்பப் பெற்றுள்ளதில் தவறில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரில் 27.9.2024 அன்று செய் தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சிபிஅய்க்கு அளிக்கப் பட்டுள்ள விசாரணைக் கான ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ள நிகழ்வுகள் கடந்த காலத் திலும் நடந்துள்ளன. கருநாட கத்தில் தேவராஜ் அா்ஸ் முதலமைச்சராக இருந்த நேரத்தில், சிபிஅய் தவறாக பயன்படுத்தப்பட்டது.
அப்போது, சிபிஅய் விசாரணைக்கு அளிக்கப் பட்டிருந்த ஒப்புதலை மாநில அரசு திரும்பப் பெற்றது. எனவே, இது பொதுவாக நடக்கக் கூடியது தான்.

கருநாடகத்தில் நான் (மல்லிகார்ஜுன கார்கே) உள்துறை அமைச்சராக இருந்த போது, சந்தனக்கடத்தல் வீரப்பன் வழக்கு, அப்துல் கரீம் தெல்கியின் முத்திரைத்தாள் மோசடி, கோலாரில் ஒரு வழக்கு உள்ளிட்டவற்றை சிபிஅய் விசாரணைக்கு ஒப்படைத்திருந்தேன்.
மாநில காவல் துறையினரே சிறப்பாக விசாரணை நடத்துவதால், அந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டனா்.

இவை அனைத்தும் முக்கியமான வழக்குகள். இந்த மூன்று வழக்குகளும் மாநிலங்களுக்கு இடையி லானது என்பதால், சிபிஅய் விசாரணைக்கு ஒப்படைத்திருந்தேன். அது போன்ற வழக்குகளையே சிபிஅய் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

விசாரணைக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்பு தலை திரும்பப் பெறுவது அல்லது விசாரணைக்கு ஒப்படைப்பது அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *