பீகார் பி.ஜே.பி. அரசின் சாதனையோ சாதனை! ஒரே மாதத்தில் 15 பாலங்கள் இடிந்து விழுந்தன!

viduthalai
1 Min Read

பாட்னா, அக்.1- பிகாரில் பாகல்பூர் மாவட் டத்தில் கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பாகல்பூர் மாவட்ட அலுவலகம் வெளியிட் டுள்ள அறிக்கையில், ஆற்றில் நீர் மட்டம் அதிகமாக உயர்ந்ததால் பாலத்தின் தூண்களில் ஒன்று விழுந்தது. இந்த நிகழ்வில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதசாரிகள் உட்பட போக்குவரத்து நிறுத் தப்பட்டு இருபுற மும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. பாலத்தின் சீரமைப்புப் பணிகள் பின்னர் மேற் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் சிவான், சரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம் பாரன் மற்றும் கிஷன்கஞ்ச் மாவட் டங்களில் 15 பாலங்கள் இடிந்து விழுந்ததன. பீகாரில் பாலங்கள் இடிந்துவிழும் நிகழ்வு நின்றபாடில்லை.

ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி, இதுபோன்ற அசம் பாவிதங்களைத் தடுப்பதில் மாநில அரசு தோல்வி அடைந் துள்ளதாக விமர் சித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *