ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்காக மூன்று சட்ட முன் வடிவுகளை கொண்டுவர ஒன்றிய பிஜேபி அரசு பரிசீலனையாம்

viduthalai
2 Min Read

புதுடில்லி, செப்.30- ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்காக 3 மசோதாக்களை கொண்டு வர ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

18 திருத்தங்கள்

நாடாளுமன்றம், சட்டமன் றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத் தில் தேர்தல் நடத்த வகைசெய் யும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அமைக்கப் பட்டிருந்த ராம்நாத் கோவிந்த் கமிட்டி அளித்த அறிக்கைக்கு ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அத்துடன் இந்த குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த சுமார் 18 அரசி யல்சாசன திருத்தங்களை மேற் கொள்ள இந்த கமிட்டி பரிந்து ரைத்து இருந்தது.

அரசியல் சாசன திருத்த மசோதாக்கள்

எனவே இதற்காக 3 மசோ தாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வர ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் அரசியல் சாசனத்தை திருத்த வகை செய்யும் 2 மசோக்களும் அடங்கும் என அரசு வட்டா ரங்கள் தெரிவித்து உள்ளன.

இதில் முதலாவது திருத்த மசோதாவானது,நாடாளுமன் றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகைசெய்யும் மசோதா ஆகும்.

இந்த மசோதா மூலம் அரசி யல் சாசனப்பிரிவு 82 ஏ-ல் திருத்தம் (மக்களவை, சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை ஒன்றாக முடித் தல் மற்றும் தேதி) செய்யப்படும். மேலும் அரசியல் சட்டப்பிரிவு 83 (2)- லும் இதன் மூலம் திருத்தம் (மக்களவை பதவிக்காலம் மற் றும் கலைப்பு) மேற்கொள்ளப் படும். இதைப்போல சட்டமன்றங்களைக் கலைப்பது மற்றும் ஒரே நேரத் தில் தேர்தல் என்ற சொற் களைச் சேர்ப்பதற்காக சட்டப் பிரிவு 327-அய் திருத்துவது தொடர்பான விதிகளும் இதில் உள்ளன.

இவ்வளவு திருத்தங்களை மேற்கொள்ள வகை செய்யும் இந்த முதலாவது திருத்த மசோ தாவுக்கு 50 சதவீத மாநிலங்க ளின் ஒப்புதல் தேவைப்படும்.

வாக்காளர் பட்டியல்

2-ஆவது திருத்த மசோதா வாக்காளர் பட்டியல் தொடர் பானது ஆகும். அதாவது உள் ளாட்சி தேர்தல்களுக்காக மாநில தேர்தல் ஆணையங்க ளுடன் கலந்தாலோசித்து தேர்தல் ஆணையத்தால் பொது வாக் காளர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக அரசமைப்பு விதி களை திருத்த வழிவகை செய்கிறது.

இந்த திருத்த மசோதா மக்க ளவை மற்றும் மாநில சட்டமன் றங்களுக்கான தேர்தல்களு டன், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத் தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் உருவாக்கும். மாநில விவகாரங்களை கையாளும் இந்த மசோதாவும் 50 சதவீத மாநிலங்களின் ஒப்பு தலை பெற வேண்டும் என அரசு வட்டாரங்கள் தெரிவித் தன .

3-ஆவது மசோதா

3-ஆவது மசோதா சாதாரண மானது ஆகும். இது சட்டமன்றம் கொண்ட புதுச்சேரி, டில்லி, காஷ்மீர் ஆகிய யூனியன் பிர தேசங்களை கையாளும் சட்ட வழிமுறைகளில் திருத்தம் மேற் கொள்ளும் வகையில் உருவாக் கப்படுகிறது. இது வழக்கமான மசோதா என்பதால் மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை என்றவாறு 3 மசோதாக்களின் தயாரிப்பில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *