எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பா.ஜ.க. திட்டம்! உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

1 Min Read

மும்பை, செப்.30 எதிர்க்கட்சிகளை பிளவு படுத்த திரைமறைவில் பாஜக கூட்டம் நடத்துவதாக உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே நேற்று (29.9.2024) கூறியதாவது:-
‘‘நாக்பூருக்கு அண்மையில் சென்ற ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, பாரதீய ஜனதா தலைவர்களுடன் பூட்டிய அறைக்குள் கூட்டம் நடத்தினார். அப்போது எதிர்க்கட்சிகளைப் பிளவு படுத்தி என்னையும், சரத்பவாரையும் அரசியல் ரீதியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார். திரைமறைவில் அவர்கள் பேசுவது ஏன்? இதை மக்கள் முன்பு சொல்ல வேண்டும்.

என்னையும், சரத்பவாரையும் அரசியல் ரீதியாக முடித்துவிட அமித்ஷா ஏன் விரும்புகிறார்? அப்போதுதான் பாரதீய ஜனதா மராட்டியத்தை கொள்ளையடிக்க முடியும். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்ற கட்சிகளை உடைப்பது மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை வேட்டையாடுவது உள்ளிட்ட பாரதீய ஜனதாவின் ஹிந்துத்துவாவுடன் எப்படி உடன்படுகிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது.வர இருக்கும் தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்று வதை விட, மராட்டியத்தைக் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்து வதே முக்கியம்.’’
இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *