சத்ரபதி சம்பாஜிநகர், செப்.29- அனுமதியின்றி காதல் திருமணம் செய்தவர் குடும்பத்தை 7 தலைமுறைக்கு ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த ஜாதி பஞ்சாயத்து உறுப் பினர்கள் 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கட கர்கானா பகுதியை சேர்ந்தவர் நரசு புல்மாலி. இவரது மகன் சிவாஜி. இவருக்கு திருமண மாகி மாலன் என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
நரசு புல்மாலியின் மனைவி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் ஒரு பெண்ணை காதலித்து திரு மணம் செய்துகொண்டார்.
ஊரின் ஜாதி பஞ்சாயத்து அனுமதி பெறாமல் அவர் காதல் திருமணம் செய்து கொண்டது குற்றம் என அந்த பஞ்சாயத்தினர் கூறினர். எனவே ஜாதி பஞ்சாயத்து முன் ஆஜராகும் படி நரசு புல்மாலி மற்றும் அவரது குடும்பத் தினருக்கு கட்டளையிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் ஜாதி பஞ்சாயத்து கூடியது. இதில் ஊர்மக்கள் சுமார் 800 பேர் கூடினர். அவர்கள் முன் புல்மாலி, மகன் சிவாஜி, மருமகள் மாலன் மற்றும் குடும்பத் தினர் ஆஜரானார்கள். அப்போது ஜாதி பஞ்சாயத்தின் அனுமதியின்றி பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட குற்றத்துக்காக நரசு புல்மாலிக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுத்தால் உங்கள் குடும்பத்தையே கொன்று விடுவோம் என பஞ்சாயத்தினர் மிரட்டல் விடுத்தனர்.
நரசு புல்மாலி மற்றும் அவரது குடும் பத்தினர் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என தங்களது இயலாமையை பஞ்சாயத்தினர் மத்தியில் வெளிப்படுத்தினர். அபராதம் செலுத்த முடியாததால் நரசு புல்மாலி குடும்பத்தை 7 தலைமுறைகளுக்கு ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக ஜாதி பஞ்சாயத்தினர் உத்தரவிட்டனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நரசு புல்மாலியின் மருமகள் மாலன், அஸ்தி காவல் நிலையத்தில் ஜாதி பஞ்சாயத்து உறுப்பினர்கள் 9 பேருக்கு எதிராக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் 9 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.