தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஆக.7-ஆம் தேதி வரை நீட்டிப்பு

1 Min Read

சென்னை, ஆக. 4 கல்லூரிப் பேராசிரியர்களுக்கான தேசிய நல்லா சிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆக.7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேனாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் செப். 5-ஆம் தேதி ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கற்றல், கற்பித்தல் பணியில் சிறந்துவிளங்கும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகளால் நல்லாசிரியர் விரு துகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு கல்லூரி பேராசிரியருக்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் பணிகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மேற்கொண்டு வருகிறது. இந்த விருதுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விண்ணப் பிக்கும் அவகாசம் ஆக.7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது. இதையடுத்து பேராசிரி யர்கள், பாலிடெக்னிக் விரிவுரையா ளர்கள், அய்டிஅய் பயிற்றுநர்கள் ஆகியோர் ˜ www.awards.gov.in மற்றும் nat.aicte-india.org ஆகிய இணைய தளங்கள் வழியாக துரித மாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் தேர்வாகும் சிறந்த ஆசிரி யர்களுக்கு குடியரசுத் தலைவரால் டில்லியில் செப்.5ஆம் தேதி விருது வழங்கப்படும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலை தளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *