கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக திராவிடர் கழகக் கொடியேற்று விழா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியாருடைய 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகக் கொடியேற்று விழா வெள்ளமடம் கிறிஸ்து நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் திராவிடர்கழகக் கொடியினை ஏற்றிவைத்தார். திராவிட நட்புக் கழக பொறுப்பாளர் விஷ்ணு, மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ். அலெக்சாண்டர், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமார தாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் எஸ்.குமாரதாஸ், தோவாளை ஒன்றிய தலைவர்
மா.ஆறுமுகம், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், மாவட்ட கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, தோழர்கள் தும்பவிளை மு.பால்மணி, நல்லூர் பெருமாள், பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *