மதமா? உயிர் வதமா? பீகாரில் நீரில் மூழ்கி 46 பேர் சாவு

Viduthalai
1 Min Read

பாட்னா, செப்.27- பீகாரில் ‘புனித’ நீராடிய போது நீரில் மூழ்கி 46 பேர் உயிரிழந்தனர்.
பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய வட மாநிலங்களிலும், அண்டை நாடான நேபாளத்திலும் ‘ஜிவித்புத்ரிகா’ என்ற விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின்போது அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருந்து, குழந்தை களுடன் ஆறுகள் மற்றும் குளங்களில் ‘புனித’ நீராடுவது வழக்கமாம்.

இந்த நிலையில் பீகாரில் நேற்று முன்தினம் (25.9.2024) ‘ஜிவித்புத்ரிகா’ விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் அம்மக்கள் தங்கள் குழந்தை களுடன் சேர்ந்து ‘புனித’ நீராடினர்.
அப்படி ‘புனித’ நீராடியபோது பெண்கள் மற்றும் குழந்தைகள் பலர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 15 மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு நிகழ்வுகளில் 37 குழந்தைகள் உள்பட 46 பேர் உயிரிழந்த தாகவும், 3 பேர் காணாமல் போனாதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்தது.
இதனிடையே‘ஜிவித்புத்ரிகா’ விழாவின்போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில முதல மைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *