* இதுவரை திரிபுவாதிகளை மட்டுமே சந்தித்திருக்கின்றோம்; வரலாற்றில் திரிபுவாதம் -இலக்கியத்தில் திரிபுவாதம் – எல்லாவற்றிலும் திரிபுவாதம்!
* ‘‘வரலாற்றுத் திருடர்கள் ஜாக்கிரதை’’ என்று மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லக்கூடிய ஓர் அமைப்பிற்கு இன்றைக்குக் கால்கோள் விழா!
சிந்துவெளி நாகரிகம் என்று சொல்வது – நம்முடைய சமுதாயத்தினுடைய முந்து ஒளி நாகரிகம்!
சென்னை, செப்.26 சிந்துவெளி நாகரிகம் என்று சொல்வது – முந்து ஒளி நாகரிகம்- நம்முடைய சமுதாயத்தினுடைய முந்து ஒளி நாகரிகம். இது யாராலும் மறுக்கப்பட முடியாதது. இதுவரை திரிபுவாதிகளை மட்டுமே சந்தித்திருக்கின்றோம். வரலாற்றில் திரிபுவாதம், இலக்கியத்தில் திரிபுவாதம், எல்லாவற்றிலும் திரிபுவாதம். ஆனால், வரலாற்றுத் திருடர்களை இப்போதுதான் கண்டுபிடித்திருக்கின்றோம். எனவேதான், ‘‘திருடர்கள் ஜாக்கிரதை” என்று போடுவார்கள். அதேபோல, ‘‘வரலாற்றுத் திருடர்கள் ஜாக்கிரதை” என்று மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லக்கூடிய ஓர் அமைப்பிற்கு இன்றைக்குக் கால்கோள் விழா நடத்தியிருக்கின்றோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா!
நேற்று முன்தினம் (24.9.2024) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழாவிற்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா!
நேற்று முன்தினம் (24.9.2024) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழாவிற்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது தலைமையுரை வருமாறு:
மறக்க முடியாத வாழ்வில் ஒரு திருநாள்!
மிகுந்த வரலாற்றுப் பெருமையோடு பல்வேறு செய்திகளைப் பகிர்கின்ற நல்ல ஆய்வரங்கமாக அமைந்துள்ள சிந்துவெளி திராவிட நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதைப்பற்றி அதிகாரப்பூர்வமாக, மறுக்க முடியாத சான்றாவணங்களை தங்கள் கையிலே உள்ளவற்றை ஆய்வுகளாகத் தந்து விளக்கம் சொல்லக்கூடிய அருமையான பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் இவர்களையெல்லாம் கொண்ட இந்த சிறப்பான தொடக்க விழா ஒரு மறக்க முடியாத வாழ்வில் ஒரு திருநாள் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பெருமை தரக்கூடிய ஒன்றாகும்.
அப்படிப்பட்ட இவ்விழாவில், முதற்கண் இங்கே வந்து தொடக்க உரையாற்றிய பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பெ.ஜெகதீசன் அவர்களே,
வரவேற்புரையாற்றிய நம்முடைய கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
மறக்க முடியாத வாழ்வில் ஒரு திருநாள்!
மிகுந்த வரலாற்றுப் பெருமையோடு பல்வேறு செய்திகளைப் பகிர்கின்ற நல்ல ஆய்வரங்கமாக அமைந்துள்ள சிந்துவெளி திராவிட நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதைப்பற்றி அதிகாரப்பூர்வமாக, மறுக்க முடியாத சான்றாவணங்களை தங்கள் கையிலே உள்ளவற்றை ஆய்வுகளாகத் தந்து விளக்கம் சொல்லக்கூடிய அருமையான பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் இவர்களையெல்லாம் கொண்ட இந்த சிறப்பான தொடக்க விழா ஒரு மறக்க முடியாத வாழ்வில் ஒரு திருநாள் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பெருமை தரக்கூடிய ஒன்றாகும்.
அப்படிப்பட்ட இவ்விழாவில், முதற்கண் இங்கே வந்து தொடக்க உரையாற்றிய பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பெ.ஜெகதீசன் அவர்களே,
வரவேற்புரையாற்றிய நம்முடைய கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
மதியுரைஞர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்.
இந்தத் துறையில் ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கியது மட்டுமல்லாமல், சிந்து சமவெளி நாகரிகத்தை மறந்துவிடாத அளவிற்கு மட்டுமல்ல, இளைய தலைமுறைக்கு, இனி வரக்கூடிய தலை முறைக்கு, இன்றைய தலைமுறைக்கும் நன்றாக நினைவூட்டவேண்டும் என்பதற்காக, உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு, அதற்கான முயற்சிகளை எடுத்து, இந்த நூற்றாண்டு விழாவிற்கே காரணமாக அமைந்தவர் அய்யா திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் ஆவார்கள்.
அவர், ஒடிசா மாநில அரசின் தலைமைச் செயலாளராக இருந்து, ஆலோசகர் என்று சொல்லக்கூடிய மதியுரை ஞராக அந்த அரசுக்குப் பல ஆண்டுகளாக இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் நாட்டிற்கே மதியுரைஞராக இதன்மூலம் ஆகியிருக்கிறார். எல்லோருக்கும் மதியுரைஞராக வழிகாட்டியாக இருக்கக்கூடிய ஒரு நல்ல பணியை, நல்ல தொண்டை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை இந்த இனம் எதை மறக்காமல் இருக்கவேண்டுமோ, அதைச் சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட சிந்து வெளி ஆய்வாளர், தலைசிறந்த சிந்தனையாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும், ஒடிசா மொழி இன்னும் பல மொழிகளிலும் நிறைய எழுதியிருக்கக்கூடியவர். அவர் பணியாற்றிய காலத்தில்கூட, பயணங்கள்தான் அவருடைய மிக முக்கியமான ஆய்வுக்கு அடித்தளம்.
எங்கே போனாலும், அவருடைய சொந்தப் பணி என்பது அதுதான். பொருள்களைத் தேடுவார்கள். மற்றவர்களும் பொருள்களைத் தேடுவார்கள் – அது வேறு வகை.
இந்தத் துறையில் ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கியது மட்டுமல்லாமல், சிந்து சமவெளி நாகரிகத்தை மறந்துவிடாத அளவிற்கு மட்டுமல்ல, இளைய தலைமுறைக்கு, இனி வரக்கூடிய தலை முறைக்கு, இன்றைய தலைமுறைக்கும் நன்றாக நினைவூட்டவேண்டும் என்பதற்காக, உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு, அதற்கான முயற்சிகளை எடுத்து, இந்த நூற்றாண்டு விழாவிற்கே காரணமாக அமைந்தவர் அய்யா திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் ஆவார்கள்.
அவர், ஒடிசா மாநில அரசின் தலைமைச் செயலாளராக இருந்து, ஆலோசகர் என்று சொல்லக்கூடிய மதியுரை ஞராக அந்த அரசுக்குப் பல ஆண்டுகளாக இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் நாட்டிற்கே மதியுரைஞராக இதன்மூலம் ஆகியிருக்கிறார். எல்லோருக்கும் மதியுரைஞராக வழிகாட்டியாக இருக்கக்கூடிய ஒரு நல்ல பணியை, நல்ல தொண்டை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை இந்த இனம் எதை மறக்காமல் இருக்கவேண்டுமோ, அதைச் சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட சிந்து வெளி ஆய்வாளர், தலைசிறந்த சிந்தனையாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும், ஒடிசா மொழி இன்னும் பல மொழிகளிலும் நிறைய எழுதியிருக்கக்கூடியவர். அவர் பணியாற்றிய காலத்தில்கூட, பயணங்கள்தான் அவருடைய மிக முக்கியமான ஆய்வுக்கு அடித்தளம்.
எங்கே போனாலும், அவருடைய சொந்தப் பணி என்பது அதுதான். பொருள்களைத் தேடுவார்கள். மற்றவர்களும் பொருள்களைத் தேடுவார்கள் – அது வேறு வகை.
நமக்கு பெரிய அரிய வரலாற்றுச் செல்வங்களைத் தந்திருக்கின்றார்!
ஆனால், இவருடைய பயணம் முழுவதும், ஆய்வுகளுக்கான பொருள்களைத் தேடித்தேடி, நமக்கு பெரிய அரிய வரலாற்றுச் செல்வங்களைத் தந்திருக்கின்றார். அவருக்குக் காலங்காலமாக திராவிடர்கள் நன்றி செலுத்தியாகவேண்டும்.
ஆகவே, அவரைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. அதனால்தான், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பாக மதிப்புறு முனைவர் பட்டத்தைக் கொடுக்க முன்வந்தபொழுது, அவர் எளிதில் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் வற்புறுத்தி அப்பட்டத்தை அவருக்குக் கொடுத்தோம்.
இவ்வளவு பெரிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கக்கூடிய அருமை அய்யா ஆர்.பால கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்களே,
ஆனால், இவருடைய பயணம் முழுவதும், ஆய்வுகளுக்கான பொருள்களைத் தேடித்தேடி, நமக்கு பெரிய அரிய வரலாற்றுச் செல்வங்களைத் தந்திருக்கின்றார். அவருக்குக் காலங்காலமாக திராவிடர்கள் நன்றி செலுத்தியாகவேண்டும்.
ஆகவே, அவரைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. அதனால்தான், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பாக மதிப்புறு முனைவர் பட்டத்தைக் கொடுக்க முன்வந்தபொழுது, அவர் எளிதில் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் வற்புறுத்தி அப்பட்டத்தை அவருக்குக் கொடுத்தோம்.
இவ்வளவு பெரிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கக்கூடிய அருமை அய்யா ஆர்.பால கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்களே,
தொல்லியல் அறிஞர் கி. அமர்நாத் இராமகிருஷ்ணா
அதேபோல, இந்தத் திடலில் உருவானவர் என்ற பெருமை நம்முடைய தொல்லியல் அறிஞர் கி. அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்களுக்கு உண்டு. திடல், அவருக்கு உதவி செய்தது. ஆனால், இவர் நாட்டிற்கே உதவி செய்தவர், சரித்திரத்திற்கே, வரலாற்றுக்கே உதவி செய்யக்கூடிய ஒளிமுத்தாக இருக்கிறார்.
அதேபோல, இந்தத் திடலில் உருவானவர் என்ற பெருமை நம்முடைய தொல்லியல் அறிஞர் கி. அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்களுக்கு உண்டு. திடல், அவருக்கு உதவி செய்தது. ஆனால், இவர் நாட்டிற்கே உதவி செய்தவர், சரித்திரத்திற்கே, வரலாற்றுக்கே உதவி செய்யக்கூடிய ஒளிமுத்தாக இருக்கிறார்.
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசக்கூடிய பேராசிரியர் அ.கருணானந்தன்
அதேபோலத்தான், நம்முடைய பேராசிரியர் அய்யா அ.கருணானந்தன் அவர்களாவார்கள். எதை எடுத்தாலும், வழவழா கொழகொழா என்று பேசத் தெரியாதவர். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசக்கூடியவர். இதுதான் பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்களுடைய அடையாளமாகும்.
அதேபோலத்தான், நம்முடைய பேராசிரியர் அய்யா அ.கருணானந்தன் அவர்களாவார்கள். எதை எடுத்தாலும், வழவழா கொழகொழா என்று பேசத் தெரியாதவர். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசக்கூடியவர். இதுதான் பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்களுடைய அடையாளமாகும்.
அதேபோல நன்றியுரை கூறவிருக்கக்கூடிய கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
எதிரே இருக்கக்கூடிய அறிஞர் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கூட்டம் 9 மணியோடு முடிந்துவிடும் என்று அறிவித்திருக்கின்றோம். என்னுரை 10 நிமிடங்கள்தான். ஏனென்றால், இவர்கள் வரைந்த சித்திரத்தை நான் கலைத்துவிடக் கூடாது.
தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் போன்ற வற்றில் நாங்கள் உரையாற்றி முடித்தவுடன், ஒலி பெருக்கியாளர் பாடலை ஒலிபரப்பலாம் என்று பாட லைப் போடுவார். அதை நாங்கள் நிறுத்தச் சொல்வோம். ஏனென்றால், அந்தப் பாடலைப்பற்றி மக்கள் அப்போது நினைக்கக் கூடாது. உரையைக் கேட்ட சிந்தனையுடன் மக்கள் வீட்டிற்குச் செல்லவேண்டும்.
எதிரே இருக்கக்கூடிய அறிஞர் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கூட்டம் 9 மணியோடு முடிந்துவிடும் என்று அறிவித்திருக்கின்றோம். என்னுரை 10 நிமிடங்கள்தான். ஏனென்றால், இவர்கள் வரைந்த சித்திரத்தை நான் கலைத்துவிடக் கூடாது.
தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் போன்ற வற்றில் நாங்கள் உரையாற்றி முடித்தவுடன், ஒலி பெருக்கியாளர் பாடலை ஒலிபரப்பலாம் என்று பாட லைப் போடுவார். அதை நாங்கள் நிறுத்தச் சொல்வோம். ஏனென்றால், அந்தப் பாடலைப்பற்றி மக்கள் அப்போது நினைக்கக் கூடாது. உரையைக் கேட்ட சிந்தனையுடன் மக்கள் வீட்டிற்குச் செல்லவேண்டும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஆழமாக எடுத்துரைத்தார்கள்!
அதுபோன்றுதான் அதிக நேரத்தை நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இங்கே உரையாற்றிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஆழமாக எடுத்துரைத்திருக்கிறார்கள்.
இத்தகைய ஆய்வாளர்கள் சுரங்கங்கள்; வெட்டி வெட்டி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் ஆய்வாளர்கள் இல்லை. அதேநேரத்தில், தொய்வாளர்களாக இருக்கக் கூடிய மக்களை, மாற்றிக் கொண்டிருக்கக் கூடிய தெருப் பேச்சாளர்கள் நாங்கள்.
அதுபோன்றுதான் அதிக நேரத்தை நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இங்கே உரையாற்றிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஆழமாக எடுத்துரைத்திருக்கிறார்கள்.
இத்தகைய ஆய்வாளர்கள் சுரங்கங்கள்; வெட்டி வெட்டி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் ஆய்வாளர்கள் இல்லை. அதேநேரத்தில், தொய்வாளர்களாக இருக்கக் கூடிய மக்களை, மாற்றிக் கொண்டிருக்கக் கூடிய தெருப் பேச்சாளர்கள் நாங்கள்.
தெருத் தெருவாக கொண்டு போய் சேர்க்கவேண்டிய வேலைதான் எங்களுடைய வேலை!
ஆகவே, உங்கள் சரக்கை எங்களிடம் கொடுங்கள்; நீங்கள் சுரங்கத்திலிருந்து எடுத்துக் கொடுங்கள்; அதைத் தெருத் தெருவாக கொண்டு போய் சேர்க்கவேண்டிய வேலைதான் எங்களுடைய வேலை.
மார்ஷல் என்றால் எல்லோருக்கும் முன்பு தெரியாது. ஆனால், சர்.ஜான் மார்ஷல் அவர்களை, வீட்டுக்கு வீடு இப்பொழுது தெரியும், நாங்கள் எடுத்துச் செல்வோம்!
நம்முடைய பிரின்சு அவர்கள் இணைப்புரை வழங்கும்பொழுது, அவாளுக்கு, மார்ஷல் என்றாலும் பிடிக்காது; கால்டுவெல் என்றாலும் பிடிக்காது என்றார்.
‘‘திராவிடர் கழகம்‘’ என்றாக்கிய பெருமை
தந்தை பெரியாரையே சாரும்!
தந்தை பெரியார் என்ற நம்முடைய பேராசான், மிகப்பெரிய அளவிற்கு மக்களோடு கலந்தவர். அவர்தான் சொன்னார், ‘‘அல்லாதவர்கள், அல்லாதவர்கள்” என்று பெயர் வைத்த காலத்தில், என்னய்யா, 100-க்கு 3 பேர் இருக்கிறான்; 97 பேர், ‘‘அல்லாதவர்கள்” என்ற பெயரில் இருக்கலாமா? நமக்கென்று நாகரிகம் இல்லையா? நமக்கென்று பண்பாடு இல்லையா?” என்று கேட்டுத்தான், ‘‘நீதிக்கட்சி” என்று சொல்லுகின்ற நேரத்தில், ‘‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்” என்றுதான் தொடங்கினார்கள். அதைத் ‘‘திராவிடர் கழகம்”, ‘‘திராவிடர் இயக்கம்” என்று ஆக்கிய பெருமையும் தந்தை பெரியார் அவர்களையே சாரும்.
அது பெயருக்காக அல்ல; அல்லது வெறுப்புக்காக அல்ல!
அதைத்தான் திராவிட நாகரிகம் என்று இன்றைக்குப் பேசுகின்ற நேரத்தில், நாம் உணருவதற்கும், பிறருக்கு அறிவிப்பதற்கும் கடமைப்பட்டு இருக்கின்றோம்.
‘திராவிடம்’ என்று சொல்லும்பொழுது, உடனே, அதுபற்றி பல மாதிரி பேசக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.
இப்பொழுது என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ‘‘இப்பொழுதுதான் எல்லோரும் கலந்துவிட்டார்கள்; பிறகு என்ன ஆரியர்? திராவிடர்? என்று சொல்கிறீர்கள்’’ என்கிறார்கள்.
கலந்தது எங்களுக்கே நன்றாகத் தெரியும்; அதிலொன்றும் சந்தேகமேயில்லை. அது முக்கியமல்ல, ரத்தப் பரிசோதனை வைத்து, இவர் திராவிடர், இவர் ஆரியர் என்று நாம் பகுக்கவில்லை.
அதற்குரிய அடையாளம், பண்பாட்டு அடையாளம்; பண்பாட்டில் மாறியிருக்கிறார்களா? என்பதுதான்.
ஆகவே, உங்கள் சரக்கை எங்களிடம் கொடுங்கள்; நீங்கள் சுரங்கத்திலிருந்து எடுத்துக் கொடுங்கள்; அதைத் தெருத் தெருவாக கொண்டு போய் சேர்க்கவேண்டிய வேலைதான் எங்களுடைய வேலை.
மார்ஷல் என்றால் எல்லோருக்கும் முன்பு தெரியாது. ஆனால், சர்.ஜான் மார்ஷல் அவர்களை, வீட்டுக்கு வீடு இப்பொழுது தெரியும், நாங்கள் எடுத்துச் செல்வோம்!
நம்முடைய பிரின்சு அவர்கள் இணைப்புரை வழங்கும்பொழுது, அவாளுக்கு, மார்ஷல் என்றாலும் பிடிக்காது; கால்டுவெல் என்றாலும் பிடிக்காது என்றார்.
‘‘திராவிடர் கழகம்‘’ என்றாக்கிய பெருமை
தந்தை பெரியாரையே சாரும்!
தந்தை பெரியார் என்ற நம்முடைய பேராசான், மிகப்பெரிய அளவிற்கு மக்களோடு கலந்தவர். அவர்தான் சொன்னார், ‘‘அல்லாதவர்கள், அல்லாதவர்கள்” என்று பெயர் வைத்த காலத்தில், என்னய்யா, 100-க்கு 3 பேர் இருக்கிறான்; 97 பேர், ‘‘அல்லாதவர்கள்” என்ற பெயரில் இருக்கலாமா? நமக்கென்று நாகரிகம் இல்லையா? நமக்கென்று பண்பாடு இல்லையா?” என்று கேட்டுத்தான், ‘‘நீதிக்கட்சி” என்று சொல்லுகின்ற நேரத்தில், ‘‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்” என்றுதான் தொடங்கினார்கள். அதைத் ‘‘திராவிடர் கழகம்”, ‘‘திராவிடர் இயக்கம்” என்று ஆக்கிய பெருமையும் தந்தை பெரியார் அவர்களையே சாரும்.
அது பெயருக்காக அல்ல; அல்லது வெறுப்புக்காக அல்ல!
அதைத்தான் திராவிட நாகரிகம் என்று இன்றைக்குப் பேசுகின்ற நேரத்தில், நாம் உணருவதற்கும், பிறருக்கு அறிவிப்பதற்கும் கடமைப்பட்டு இருக்கின்றோம்.
‘திராவிடம்’ என்று சொல்லும்பொழுது, உடனே, அதுபற்றி பல மாதிரி பேசக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.
இப்பொழுது என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ‘‘இப்பொழுதுதான் எல்லோரும் கலந்துவிட்டார்கள்; பிறகு என்ன ஆரியர்? திராவிடர்? என்று சொல்கிறீர்கள்’’ என்கிறார்கள்.
கலந்தது எங்களுக்கே நன்றாகத் தெரியும்; அதிலொன்றும் சந்தேகமேயில்லை. அது முக்கியமல்ல, ரத்தப் பரிசோதனை வைத்து, இவர் திராவிடர், இவர் ஆரியர் என்று நாம் பகுக்கவில்லை.
அதற்குரிய அடையாளம், பண்பாட்டு அடையாளம்; பண்பாட்டில் மாறியிருக்கிறார்களா? என்பதுதான்.
மிகவும் ஆபத்தான படையெடுப்பு – பண்பாட்டுப் படையெடுப்புதான்!
படையெடுப்பிலேயே மிக ஆபத்தான படையெடுப்பு எது தெரியுமா?
அரசியல் படையெடுப்போ, பொருளாதார படையெடுப்போ அல்ல – மிகவும் ஆபத்தான படையெடுப்பு என்பது பண்பாட்டுப் படையெடுப்புதான்.
அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க வேண்டும் என்பதற்காகத்தான், பண்பாட்டுத் துறையை நாங்கள் செய்கிறோம் என்று தந்தை பெரியார் அவர்கள், அதை ஆழமாக, தெளிவாக மக்கள் மத்தியிலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
இன்றைக்கும்கூட, திராவிட இனம் என்று சொல்லும்பொழுது, நாம் பண்பாட்டு அடிப்படையிலே போகிறோமே தவிர, இன வேறுபாடு அடிப்படையில் போகவில்லை.
இதற்கு எவை ஆதாரங்கள் என்றால், இதோ படமாக இருக்கிறவர்கள் எல்லாம்தான். அதற்கு யார் யார் உதவி செய்தார்களோ அவர்கள்தான்.
ஆனால், இன்றைக்குப் பலர் என்ன சொல்கிறார்கள் என்றால், பிற்போக்குவாதிகள், மதவாதிகள், ஆதிக்க வாதிகளாக இருக்கின்ற பார்ப்பனர்கள் என்ன சொல்கி றார்கள் என்றால், வெள்ளைக்காரன் கால்டுவெல் ஏதோ, ‘‘திராவிட இயக்கம், திராவிடர் ஆட்சி” என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறார். அதை வைத்து இவர்கள் பேசுகிறார்களே என்று பொருமுகிறார்கள்.
படையெடுப்பிலேயே மிக ஆபத்தான படையெடுப்பு எது தெரியுமா?
அரசியல் படையெடுப்போ, பொருளாதார படையெடுப்போ அல்ல – மிகவும் ஆபத்தான படையெடுப்பு என்பது பண்பாட்டுப் படையெடுப்புதான்.
அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க வேண்டும் என்பதற்காகத்தான், பண்பாட்டுத் துறையை நாங்கள் செய்கிறோம் என்று தந்தை பெரியார் அவர்கள், அதை ஆழமாக, தெளிவாக மக்கள் மத்தியிலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
இன்றைக்கும்கூட, திராவிட இனம் என்று சொல்லும்பொழுது, நாம் பண்பாட்டு அடிப்படையிலே போகிறோமே தவிர, இன வேறுபாடு அடிப்படையில் போகவில்லை.
இதற்கு எவை ஆதாரங்கள் என்றால், இதோ படமாக இருக்கிறவர்கள் எல்லாம்தான். அதற்கு யார் யார் உதவி செய்தார்களோ அவர்கள்தான்.
ஆனால், இன்றைக்குப் பலர் என்ன சொல்கிறார்கள் என்றால், பிற்போக்குவாதிகள், மதவாதிகள், ஆதிக்க வாதிகளாக இருக்கின்ற பார்ப்பனர்கள் என்ன சொல்கி றார்கள் என்றால், வெள்ளைக்காரன் கால்டுவெல் ஏதோ, ‘‘திராவிட இயக்கம், திராவிடர் ஆட்சி” என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறார். அதை வைத்து இவர்கள் பேசுகிறார்களே என்று பொருமுகிறார்கள்.
திராவிட வரலாற்றை மனுதர்மத்திலிருந்தே எடுத்திருக்கின்றோம்!
தந்தை பெரியார்தான் சொன்னார், ‘‘திராவிடம்” என்பது இருக்கிறதே, ஏதோ வெள்ளைக்காரன் சொல்லி விட்டான் என்பதற்காக அல்ல – நீ திராவிடம் என்பதை எதிர்த்துப் பேசுகிறாயே, அதனுடைய வரலாற்றை உன்னுடைய மனுதர்மத்திலிருந்தே நாங்கள் எடுத்தி ருக்கின்றோம் என்று சொன்னார்.
மனுதர்மத்தை யார் எழுதியது? நிச்சயமாக கால்டுவெல் எழுதியிருக்க முடியாது.
தந்தை பெரியார்தான் சொன்னார், ‘‘திராவிடம்” என்பது இருக்கிறதே, ஏதோ வெள்ளைக்காரன் சொல்லி விட்டான் என்பதற்காக அல்ல – நீ திராவிடம் என்பதை எதிர்த்துப் பேசுகிறாயே, அதனுடைய வரலாற்றை உன்னுடைய மனுதர்மத்திலிருந்தே நாங்கள் எடுத்தி ருக்கின்றோம் என்று சொன்னார்.
மனுதர்மத்தை யார் எழுதியது? நிச்சயமாக கால்டுவெல் எழுதியிருக்க முடியாது.
திராவிட தேசம் என்றாலே, சூத்திர தேசம்தான்!
அவர்கள் எழுதிய அசல் மனுதர்மத்தில், 10 ஆவது அத்தியாயம், 44 ஆவது சுலோகத்தில்,
‘‘பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்டவர்கள் அனைவருமே மேற்சொன்னபடி சூத்திரர்களாகி விட்டார்கள்.”
ஆகவே, திராவிட தேசம் என்றாலே, சூத்திர தேசம்தான்.
இங்கே நம்முடைய அமர்நாத் அவர்கள் மிக அழகாகச் சொன்னார். அதே கருத்தை டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள், ‘‘The Untouchables: Who were they? and why they became untouchables?’’என்ற புத்தகத்தில் நாகர் என்ற மொழியே திராவிட மொழி – இந்தியா முழுவதும் திராவிடர்கள்தான் இருந்திருக்கின்றார்கள் என்பதை ஆராய்ச்சிமூலம் சொன்னார்கள்.
அவர்கள் எழுதிய அசல் மனுதர்மத்தில், 10 ஆவது அத்தியாயம், 44 ஆவது சுலோகத்தில்,
‘‘பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்டவர்கள் அனைவருமே மேற்சொன்னபடி சூத்திரர்களாகி விட்டார்கள்.”
ஆகவே, திராவிட தேசம் என்றாலே, சூத்திர தேசம்தான்.
இங்கே நம்முடைய அமர்நாத் அவர்கள் மிக அழகாகச் சொன்னார். அதே கருத்தை டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள், ‘‘The Untouchables: Who were they? and why they became untouchables?’’என்ற புத்தகத்தில் நாகர் என்ற மொழியே திராவிட மொழி – இந்தியா முழுவதும் திராவிடர்கள்தான் இருந்திருக்கின்றார்கள் என்பதை ஆராய்ச்சிமூலம் சொன்னார்கள்.
திராவிடம் என்பது இறக்குமதி செய்யப்பட்டதல்ல!
ஆகவேதான், புராணத்தை எடுத்துக் கொண்டாலும், அங்கே திராவிடம் இருக்கிறது. வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், அங்கே திராவிடம் இருக்கிறது. திராவிடம் என்பது இறக்குமதி செய்யப்பட்டதல்ல அந்தத் திரா விடத்தினுடைய தன்மையைப்பற்றி இங்கே அழகாகச் சொன்னார்கள்.
ஆனால், காளை இருக்கவேண்டிய இடத்தில், குதிரையை கொண்டுவரலாம் என்று நினைக்கி றார்கள். அதுபோன்றுதான், எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுகிறார்கள்.
இங்கே அருமையான ஒரு கருத்தைச் சொன்னார்கள். எருமைக்காக நாம் பாடுபட்டோம்; எருமையினுடைய செயல்களைப்பற்றி தனியே ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள். எருமை கருப்பு நிறம் கொண்டது, உழைக்கிறது.
ஆகவேதான், புராணத்தை எடுத்துக் கொண்டாலும், அங்கே திராவிடம் இருக்கிறது. வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், அங்கே திராவிடம் இருக்கிறது. திராவிடம் என்பது இறக்குமதி செய்யப்பட்டதல்ல அந்தத் திரா விடத்தினுடைய தன்மையைப்பற்றி இங்கே அழகாகச் சொன்னார்கள்.
ஆனால், காளை இருக்கவேண்டிய இடத்தில், குதிரையை கொண்டுவரலாம் என்று நினைக்கி றார்கள். அதுபோன்றுதான், எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுகிறார்கள்.
இங்கே அருமையான ஒரு கருத்தைச் சொன்னார்கள். எருமைக்காக நாம் பாடுபட்டோம்; எருமையினுடைய செயல்களைப்பற்றி தனியே ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள். எருமை கருப்பு நிறம் கொண்டது, உழைக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!
எனவேதான், இந்தத் திராவிட இயக்கம், ‘திராவிட மாடல்’ ஆட்சி இதை நன்றாகப் புரிந்துகொண்டு, சிந்துவெளி நாகரிக நூற்றாண்டை சொன்னவுடன், இன்றைய முதலமைச்சர் அவர்கள், அருமையாக ஒத்துழைத்து அறிக்கை கொடுத்தது மட்டுமல்ல, சர்.ஜான் மார்ஷலுக்கு சிலை வைப்போம் என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார். அதற்காக அவருக்கு நாம் நன்றி செலுத்துகின்றோம்.
ஏனென்றால், நம் அடையாளங்களை நாம் மறக்கக் கூடாது.
நம்முடைய அடையாளங்களை அழிக்கவேண்டும் என்பதுதான் எதிரிகளின் கொள்கை!
நம்முடைய அடையாளங்களை அழிக்கவேண்டும் என்பதுதான் எதிரிகளுடைய மிக முக்கியமான கொள்கையாகும். மொழியை அழிக்கவேண்டும், அதற்கு இன்னொரு ஆதிக்கம். அதேபோன்று நம்முடைய அடையாளங்களை அழிக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய பணி.
எனவேதான், இந்தத் திராவிட இயக்கம், ‘திராவிட மாடல்’ ஆட்சி இதை நன்றாகப் புரிந்துகொண்டு, சிந்துவெளி நாகரிக நூற்றாண்டை சொன்னவுடன், இன்றைய முதலமைச்சர் அவர்கள், அருமையாக ஒத்துழைத்து அறிக்கை கொடுத்தது மட்டுமல்ல, சர்.ஜான் மார்ஷலுக்கு சிலை வைப்போம் என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார். அதற்காக அவருக்கு நாம் நன்றி செலுத்துகின்றோம்.
ஏனென்றால், நம் அடையாளங்களை நாம் மறக்கக் கூடாது.
நம்முடைய அடையாளங்களை அழிக்கவேண்டும் என்பதுதான் எதிரிகளின் கொள்கை!
நம்முடைய அடையாளங்களை அழிக்கவேண்டும் என்பதுதான் எதிரிகளுடைய மிக முக்கியமான கொள்கையாகும். மொழியை அழிக்கவேண்டும், அதற்கு இன்னொரு ஆதிக்கம். அதேபோன்று நம்முடைய அடையாளங்களை அழிக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய பணி.
இப்பொழுது பொதுவாகவே, அந்தப் பணியை செய்துகொண்டிருக்கின்றார்கள். அதனால்தான், வேத கால நாகரிகம் என்று சொல்கிறார்கள்.
அதேபோன்று இன்னொரு செய்தியை சொல்லுகிறேன்.
‘‘வேத நாகரிகம் என்பது சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக் கண்டத்திற்குள் புகுந்த ஆரியர்களால் உருவாக்கப்பட்டது. அநேகமாக இதற்கு 200 ஆண்டுகளுக்குப் பிறகு மத சுலோகங்களில் தொகுப்பு இருந்தது. அது முடிவில் ரிக் வேதம் என அழைக்கப்பட்டது. அதனுடைய இறுதி வடிவம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுந்தது.”
A.L.Basham தொகுத்த A cultural history of India என்ற நூலில் T.Burrow எழுதிய The Early Aryans கட்டுரையில்.
அதேபோன்று இன்னொரு செய்தியை சொல்லுகிறேன்.
‘‘வேத நாகரிகம் என்பது சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக் கண்டத்திற்குள் புகுந்த ஆரியர்களால் உருவாக்கப்பட்டது. அநேகமாக இதற்கு 200 ஆண்டுகளுக்குப் பிறகு மத சுலோகங்களில் தொகுப்பு இருந்தது. அது முடிவில் ரிக் வேதம் என அழைக்கப்பட்டது. அதனுடைய இறுதி வடிவம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுந்தது.”
A.L.Basham தொகுத்த A cultural history of India என்ற நூலில் T.Burrow எழுதிய The Early Aryans கட்டுரையில்.
அநாகரிகம்தானே தவிர,வேறொன்றும் கிடையாது!
ஆகவேதான், வேதகால நாகரிகம் என்று மாற்றுவதற்கு முன்பே இருந்த நாகரிகம் எது?
நாகரிகம் என்பது என்ன?
வேதத்திற்கும், நாகரிகத்திற்கும் என்ன சம்பந்தம்? அதற்கு என்ன பெயரைச் சொல்வது? என்று பேராசிரியர் கருணானந்தம் அவர்கள் கேட்டார்.
‘அ’நாவை சேர்த்துக் கொள்ளலாம். அநாகரிகம்தானே தவிர, வேறொன்றும் கிடையாது.
திரிபுவாதத்தை செய்கிறார்கள் அவர்கள். அந்தத் திரிபுவாதம் எல்லாத் துறைகளிலும் இருக்கிறது.
வரலாற்றை நாம் அறியவேண்டும். வரலாற்றைப் பாதுகாக்கவேண்டும்; வரலாற்றை உணரவேண்டும் என்று அய்யா திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னார்கள்.
ஆகவேதான், வேதகால நாகரிகம் என்று மாற்றுவதற்கு முன்பே இருந்த நாகரிகம் எது?
நாகரிகம் என்பது என்ன?
வேதத்திற்கும், நாகரிகத்திற்கும் என்ன சம்பந்தம்? அதற்கு என்ன பெயரைச் சொல்வது? என்று பேராசிரியர் கருணானந்தம் அவர்கள் கேட்டார்.
‘அ’நாவை சேர்த்துக் கொள்ளலாம். அநாகரிகம்தானே தவிர, வேறொன்றும் கிடையாது.
திரிபுவாதத்தை செய்கிறார்கள் அவர்கள். அந்தத் திரிபுவாதம் எல்லாத் துறைகளிலும் இருக்கிறது.
வரலாற்றை நாம் அறியவேண்டும். வரலாற்றைப் பாதுகாக்கவேண்டும்; வரலாற்றை உணரவேண்டும் என்று அய்யா திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னார்கள்.
புராணங்களை, இதிகாசங்களை வரலாறாக மாற்றுவதுதான் அவர்களுடைய வேலை!
ஒன்றை உங்களுக்கு ஞாபகப்படுத்தவேண்டும் – கடந்த 15 ஆண்டுகளாக இந்த நாட்டில் நடைபெறுவது என்ன? அதற்கு முன்பாகவே நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆட்சியில் அதிகாரப்பூர்வமாக அமர்ந்து செய்த ஒரு பெரிய மோசடி என்னவென்று சொன்னால், புராணங்களை, இதிகாசங்களை வரலாறாக மாற்றுவது. இரண்டாவதாக, தத்துவங்கள் என்று வந்தால், அந்தத் தத்துவங்கள் எல்லாமே மதங்கள்தான்.
தத்துவம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது என்றோ, சிந்தனைத் தொகுப்பு என்றோ வருவது கிடையாது.
ஒன்றை உங்களுக்கு ஞாபகப்படுத்தவேண்டும் – கடந்த 15 ஆண்டுகளாக இந்த நாட்டில் நடைபெறுவது என்ன? அதற்கு முன்பாகவே நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆட்சியில் அதிகாரப்பூர்வமாக அமர்ந்து செய்த ஒரு பெரிய மோசடி என்னவென்று சொன்னால், புராணங்களை, இதிகாசங்களை வரலாறாக மாற்றுவது. இரண்டாவதாக, தத்துவங்கள் என்று வந்தால், அந்தத் தத்துவங்கள் எல்லாமே மதங்கள்தான்.
தத்துவம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது என்றோ, சிந்தனைத் தொகுப்பு என்றோ வருவது கிடையாது.
அஸ்ட்ராலஜி வானவியல் அல்ல!
ஆகவே, வராலற்றுக்குப் பதிலாக புராணங்கள்; தத்துவங்களுக்குப் பதிலாக மதக் கருத்துகள். அதேபோல, விஞ்ஞானம் – அறிவியலுக்குப் பதிலாக ஜூடோ சயின்ஸ்.
வானவியல் என்று சொன்னால், அதில் அஷ்டானமி வரும். ஆனால், அஸ்ட்ராலஜி வானவியல் அல்ல.
பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் இங்கே சொன்னார்கள்; இந்தியாவையே சர்வே செய்தவர்; உலகம் முழுவதற்கும் சென்றவர் நமது பாலகிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் சொன்ன பிற்பாடு, இதில் மிக முக்கியமாக நாம் கவனிக்கவேண்டிய, தொட்டுக் காட்டவேண்டிய செய்தி என்னவென்று சொன்னால், பெரிய அளவிற்கு, இவ்வளவையும் கொண்டு போய் நாம் மக்களிடம் சேர்க்கவேண்டும்; அதுதான் மிகவும் முக்கியமானதாகும், அடிப்படையானதாகும்.
நாம் இழந்ததைத் திரும்பப் பெறுகிறோம். நம்மிடமிருந்து பறித்துக் கொண்டு போனார்கள். ஆகவே, அந்தப் பொருள்களைப் பெறவேண்டும்; அவற்றைப் பாதுகாக்கவேண்டும்;
ஆகவே, வராலற்றுக்குப் பதிலாக புராணங்கள்; தத்துவங்களுக்குப் பதிலாக மதக் கருத்துகள். அதேபோல, விஞ்ஞானம் – அறிவியலுக்குப் பதிலாக ஜூடோ சயின்ஸ்.
வானவியல் என்று சொன்னால், அதில் அஷ்டானமி வரும். ஆனால், அஸ்ட்ராலஜி வானவியல் அல்ல.
பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் இங்கே சொன்னார்கள்; இந்தியாவையே சர்வே செய்தவர்; உலகம் முழுவதற்கும் சென்றவர் நமது பாலகிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் சொன்ன பிற்பாடு, இதில் மிக முக்கியமாக நாம் கவனிக்கவேண்டிய, தொட்டுக் காட்டவேண்டிய செய்தி என்னவென்று சொன்னால், பெரிய அளவிற்கு, இவ்வளவையும் கொண்டு போய் நாம் மக்களிடம் சேர்க்கவேண்டும்; அதுதான் மிகவும் முக்கியமானதாகும், அடிப்படையானதாகும்.
நாம் இழந்ததைத் திரும்பப் பெறுகிறோம். நம்மிடமிருந்து பறித்துக் கொண்டு போனார்கள். ஆகவே, அந்தப் பொருள்களைப் பெறவேண்டும்; அவற்றைப் பாதுகாக்கவேண்டும்;
பாதுகாக்கவேண்டியதும் அதனைப்
பரப்பவேண்டியதும் எங்களுடைய வேலை!
‘‘அறிஞர்கள், ஆய்வாளர்களாகிய நீங்கள் பெற்றுத் தருகிறீர்கள். கீழடிகளிலேயே பல புதிய புதிய கருத்துகளை நாம் பெறுகிறோமோ, அதேபோலத்தான், இந்தக் கீழடிகளைவிட, தாண்டி தாண்டி ஆதாரங்களை நீங்கள் ஏராளமாகத் தந்து கொண்டிருக்கின்றீர்கள். அதை மிகப்பெரிய அளவிற்குப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எங்களைப் போன்றவர்களுடையது. அதனைப் பரப்பவேண்டியது எங்களுடைய வேலை.”
அந்த வகையில், இங்கே சிறப்பாக நீங்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அந்தப் பணியை நாடு தழுவிய அளவிற்கு நாங்கள் எடுத்துச் செல்வோம்.
பரப்பவேண்டியதும் எங்களுடைய வேலை!
‘‘அறிஞர்கள், ஆய்வாளர்களாகிய நீங்கள் பெற்றுத் தருகிறீர்கள். கீழடிகளிலேயே பல புதிய புதிய கருத்துகளை நாம் பெறுகிறோமோ, அதேபோலத்தான், இந்தக் கீழடிகளைவிட, தாண்டி தாண்டி ஆதாரங்களை நீங்கள் ஏராளமாகத் தந்து கொண்டிருக்கின்றீர்கள். அதை மிகப்பெரிய அளவிற்குப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எங்களைப் போன்றவர்களுடையது. அதனைப் பரப்பவேண்டியது எங்களுடைய வேலை.”
அந்த வகையில், இங்கே சிறப்பாக நீங்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அந்தப் பணியை நாடு தழுவிய அளவிற்கு நாங்கள் எடுத்துச் செல்வோம்.
ஒவ்வொருவருடைய உரையும், பேராசிரியர் கருணானந்தன் அவர்களுடைய உரையானாலும், அய்யா பாலகிருஷ்ணன் அவர்களுடைய உரையானாலும், இங்கே அமர்ந்திருக்கின்ற பல அறிஞர் பெருமக்கள் உரையானாலும் – இது ஓர் அறிவார்ந்த அரங்கம் என்பதை மெய்ப்பித்துள்ளது. உங்கள் அனைவருக்குமே நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வுகள் – இது தொடக்கம் – இது முடிவல்ல.
இது ஆண்டுவிழாவினுடைய தொடக்கம். ஆராய்ச்சி மன்றத்தில், ஆராய்ச்சி அகங்களில், ஆய்வுக்கூடங்களில் நீங்கள் இதைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். அதைத் தெருத் தெருவாகக் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டியது எங்களுடைய வேலை என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக எடுத்துச் சொல்லி, இதுபோன்ற நிகழ்வுகள் பல இடங்களில் நடைபெறவேண்டும்; அதன்மூலமாக வரலாற்றுத் தொய்வுகள் இல்லாமல் மாற்றவேண்டும்.
இந்தக் கூட்டத்தின் உரைகளைக் கேட்ட பிறகு, உங்களுக்கெல்லாம் ஒரு எண்ணம் தெரிந்திருக்க வேண்டும். அதனைத் தெருத் தெருவாக பரப்ப வேண்டும்.
இது ஆண்டுவிழாவினுடைய தொடக்கம். ஆராய்ச்சி மன்றத்தில், ஆராய்ச்சி அகங்களில், ஆய்வுக்கூடங்களில் நீங்கள் இதைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். அதைத் தெருத் தெருவாகக் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டியது எங்களுடைய வேலை என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக எடுத்துச் சொல்லி, இதுபோன்ற நிகழ்வுகள் பல இடங்களில் நடைபெறவேண்டும்; அதன்மூலமாக வரலாற்றுத் தொய்வுகள் இல்லாமல் மாற்றவேண்டும்.
இந்தக் கூட்டத்தின் உரைகளைக் கேட்ட பிறகு, உங்களுக்கெல்லாம் ஒரு எண்ணம் தெரிந்திருக்க வேண்டும். அதனைத் தெருத் தெருவாக பரப்ப வேண்டும்.
சிந்துவெளி நாகரிகம் – நம்முடைய சமுதாயத்தினுடைய முந்து ஒளி நாகரிகம்!
அது என்னவென்றால், சிந்துவெளி நாகரிகம் என்று சொல்வது – முந்து ஒளி நாகரிகம்- நம்முடைய சமுதாயத்தினுடைய முந்து ஒளி நாகரிகம். இது யாராலும் மறுக்கப்பட முடியாதது. இதுவரை திரிபுவாதிகளை மட்டுமே சந்தித்திருக்கின்றோம். வரலாற்றில் திரிபுவாதம், இலக்கியத்தில் திரிபுவாதம், எல்லாவற்றிலும் திரிபுவாதம்.
இப்போது ஆய்வாளர்கள் இங்கே பேசிய பிறகு, நமக்கு என்ன தெளிவாகத் தெரிகிறது என்று சொன்னால், இது திரிபுவாதம் அல்ல – இந்த வரலாற்றுத் திருடர்களை இப்போதுதான் கண்டுபிடித்திருக்கின்றோம்.
அது என்னவென்றால், சிந்துவெளி நாகரிகம் என்று சொல்வது – முந்து ஒளி நாகரிகம்- நம்முடைய சமுதாயத்தினுடைய முந்து ஒளி நாகரிகம். இது யாராலும் மறுக்கப்பட முடியாதது. இதுவரை திரிபுவாதிகளை மட்டுமே சந்தித்திருக்கின்றோம். வரலாற்றில் திரிபுவாதம், இலக்கியத்தில் திரிபுவாதம், எல்லாவற்றிலும் திரிபுவாதம்.
இப்போது ஆய்வாளர்கள் இங்கே பேசிய பிறகு, நமக்கு என்ன தெளிவாகத் தெரிகிறது என்று சொன்னால், இது திரிபுவாதம் அல்ல – இந்த வரலாற்றுத் திருடர்களை இப்போதுதான் கண்டுபிடித்திருக்கின்றோம்.
‘‘வரலாற்றுத் திருடர்கள் ஜாக்கிரதை!’’
எனவேதான், ‘‘திருடர்கள் ஜாக்கிரதை” என்று போடுவார்கள். அதேபோல, ‘‘வரலாற்றுத் திருடர்கள் ஜாக்கிரதை” என்று மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லக்கூடிய ஓர் அமைப்பிற்கு இன்றைக்குக் கால்கோள் விழா நடத்தியிருக்கின்றோம்.
நம்முடைய இனத்தை மறந்தால், நம்முடைய தத்துவத்தை, மனிதத்தையே மறந்துவிடக் கூடிய அளவிற்காகும்.
ஏனென்றால், இது வேற்றுமைபடுத்துகின்ற நாகரிகம் அல்ல. ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொன்னது; ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று சொன்னது; ‘‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று உழைப்பிற்கு மரியாதைக் காட்டக்கூடியது.
கடல் கடந்து நீ போகக்கூடாது என்று அவர்களுடைய வேதம் சொல்லியும், இன்றைக்குக் கடல் கடந்துதான் அவர்கள் போய்க்கொண்டிருக்கின்றார்கள்.
எனவேதான், ‘‘திருடர்கள் ஜாக்கிரதை” என்று போடுவார்கள். அதேபோல, ‘‘வரலாற்றுத் திருடர்கள் ஜாக்கிரதை” என்று மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லக்கூடிய ஓர் அமைப்பிற்கு இன்றைக்குக் கால்கோள் விழா நடத்தியிருக்கின்றோம்.
நம்முடைய இனத்தை மறந்தால், நம்முடைய தத்துவத்தை, மனிதத்தையே மறந்துவிடக் கூடிய அளவிற்காகும்.
ஏனென்றால், இது வேற்றுமைபடுத்துகின்ற நாகரிகம் அல்ல. ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொன்னது; ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று சொன்னது; ‘‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று உழைப்பிற்கு மரியாதைக் காட்டக்கூடியது.
கடல் கடந்து நீ போகக்கூடாது என்று அவர்களுடைய வேதம் சொல்லியும், இன்றைக்குக் கடல் கடந்துதான் அவர்கள் போய்க்கொண்டிருக்கின்றார்கள்.
திராவிடர் என்று சொல்லுகின்றபொழுது….
ஆகவேதான். ஒரு புதிய தத்துவங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவேண்டும். தந்தை பெரியார் அவர்கள், ‘‘திராவிடர் கழகம்” என்று ஏன் மாற்றினார்கள்; திராவிடர் பெருமை எப்படிப்பட்டது?
திராவிடர் என்று சொல்லுகின்றபொழுது, தலை நிமிர்கிறோம்!
திராவிடர் என்று சொல்லுகின்றபொழுது உரிமையைப் பெறுகிறோம்!
திராவிடம் என்று சொல்லுகின்றபொழுது பழை மையைப் பெறுகிறோம்!
போற்றவேண்டியவற்றைப் போற்றுகின்றோம்; காப்பாற்ற வேண்டியவற்றைக் காப்பாற்றுவோம்; பரப்பவேண்டியவற்றைப் பரப்புவோம்!
வெல்க திராவிட நாகரிகம்!
இந்த நாகரிகத்திற்குப் பாதுகாப்புத் தந்த தமிழ்நாடு அரசிற்கும், முதலமைச்சருக்கும் நம்முடைய நெஞ்சார்ந்த நன்றி!
தொடர்வோம், ஆண்டு முழுவதும்!
மக்கள் மத்தியில், மக்கள் இயக்கமாக இதைக் கொண்டு செலுத்துவோம்.
ஆகவேதான். ஒரு புதிய தத்துவங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவேண்டும். தந்தை பெரியார் அவர்கள், ‘‘திராவிடர் கழகம்” என்று ஏன் மாற்றினார்கள்; திராவிடர் பெருமை எப்படிப்பட்டது?
திராவிடர் என்று சொல்லுகின்றபொழுது, தலை நிமிர்கிறோம்!
திராவிடர் என்று சொல்லுகின்றபொழுது உரிமையைப் பெறுகிறோம்!
திராவிடம் என்று சொல்லுகின்றபொழுது பழை மையைப் பெறுகிறோம்!
போற்றவேண்டியவற்றைப் போற்றுகின்றோம்; காப்பாற்ற வேண்டியவற்றைக் காப்பாற்றுவோம்; பரப்பவேண்டியவற்றைப் பரப்புவோம்!
வெல்க திராவிட நாகரிகம்!
இந்த நாகரிகத்திற்குப் பாதுகாப்புத் தந்த தமிழ்நாடு அரசிற்கும், முதலமைச்சருக்கும் நம்முடைய நெஞ்சார்ந்த நன்றி!
தொடர்வோம், ஆண்டு முழுவதும்!
மக்கள் மத்தியில், மக்கள் இயக்கமாக இதைக் கொண்டு செலுத்துவோம்.
திராவிடம் ஒளிபெறட்டும்!
சர்.ஜான் மார்ஷல் பெயர் எங்கு பார்த்தாலும் பரவட்டும்! அதன்மூலம் திராவிடம் ஒளிபெறட்டும்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரை
யாற்றினார்.
சர்.ஜான் மார்ஷல் பெயர் எங்கு பார்த்தாலும் பரவட்டும்! அதன்மூலம் திராவிடம் ஒளிபெறட்டும்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரை
யாற்றினார்.