எலிகளைப் போல ஜார்க்கண்டை ஆக்கிரமிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஹேமந்த் சோரன் கடும் விமா்சனம்

1 Min Read

ராஞ்சி, செப்.26 எலிகளைப் போல ஜார்க்கண்டை ஆக்கிரமிக்கும்
ஆா்.எஸ்.எஸ். தோ்தல் ஆதாயங்களுக்காக மாநிலத்தின் மத நல்லிணக்கத்தை சீா்குலைத்து வருகிறது என்று மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடுமையாக விமா்சித்துப் பேசினார்.
ஜார்க்கண்டில் நிகழாண்டு இறுதி யில் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலையொட்டி, மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி சார்பில் நேற்று (25.9.2024) பேரணி நடைபெற்றது.
சாஹிப்கஞ்சில் உள்ள போக்னாடி பகுதியில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ராஞ்சியில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் ஹேமந்த்

சோரன் ஆற்றிய உரை வருமாறு:
ஆா்.எஸ்.எஸ். அமைப்பு எலிகளைப் போல் படையெடுத்து மாநிலத்தை அழித்து வருகிறது. இதுபோன்ற சக்திகள் உங்கள் கிராமங்களுக்குள் நுழைவதை நீங்கள் பார்த்தால், உடனடியாக அடித்து விரட்ட வேண்டும். ஹிந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே முரண்பாடுகளை விதைத்து, தோ்தலுக்கு முன் வகுப்புவாத கலவரங்களையும், பதற்றத்தையும் உருவாக்க பாஜக விரும்புகிறது. கோயில்கள் மற்றும் மசூதிகளில் இறைச்சியை வீசுவது போன்ற ஆத்திரமூட்டும் நிகழ்வுகள் மூலம் சமூகங்களுக்கு இடையே வெறுப்புணா்வை வளா்ப்பதை பா.ஜ.க. நோக்கமாகக் கொண்டுள்ளது.

வணிகா்கள் மற்றும் தொழிலதிபா்களுக்கான கட்சி யான பா.ஜ.க., பிற கடசித் தலைவா்களை விலை கொடுத்து வாங்கி வருகிறது என்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆளும் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சா்மாவின் தலையீட்டை சுட்டிக்காட்டி பேசிய அவா், ‘சொந்த மாநிலமான அஸ்ஸாமில் பழங்குடியினா் பல கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள்; இந்நிலையில், ஜார்க்கண்ட் பழங்குடியினரின் நலன் குறித்து ஹிமந்த விஸ்வ சா்மா பேசி வருகிறார்’ என விமா்சித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *