பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான நான்கு விருதுகள் 2024

1 Min Read

வல்லம், செப்.24- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்ட மைப்பின் சார்பில் மாநில அளவிலான நான்கு விருதுகள் இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

1920-ஆம் ஆண்டு கொல்கத் தாவில் தொடங்கப்பட்டு தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மிகப்பெரிய அமைப்பான இந்திய பொறி யாளர் கூட்டமைப்பு Institution of Engineers (India) IE(T) சார்பில் 15.09.2024 அன்று 57ஆவது பொறியாளர் நாள் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சிறப்பான செயல்பாடுகளான தொழில் நுட்ப நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடத்து வதன் மூலம் மாணவ, மாண வியரின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உறுதிசெய்யும் இக்கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டும் விதமாக, பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு “கல்விசார் விருது (பாலிடெக்னிக்) 2024” (Institutional Excellence Award (Polytechnic) 2024) மற்றும் “சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அத்தியாய விருது 2024” (Best IE(I) Students Chapter Award – 2024) இவ்விருதுகளை இந்திய பொறியாளர் கூட்டமைப்பு IE(I) தலைவர் முனைவர் ஜி.ரெங்கநாத், FIE வழங்க இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

மேலும் இவ்விழாவில் “சிறந்த முதல்வர் விருது (பாலிடெக்னிக்) 2024” (Best Principal Award (Polytechnic) 2024) இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா அவர்களுக்கும் மற்றும் “புதுமையான ஆசிரியர் விருது 2024” (Innovative Teacher Award 2024) விருது இக்கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறைத்தலைவர் க.ரோஜா அவர் களுக்கும் வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *