திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாண் கருத்துக்கு திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் கண்டனம்

1 Min Read

பெங்களூரு, செப்.23- திருப்பதி வெங்கடா சலபதி கோவிலில் வழங்கப்படும் லட்டுக்கள் தயாரிப்பில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், நாடு முழுவதும் உள்ள ஹிந்து கோவில்களில் இதுபோன்ற பிரச்சினைகளை ஆராய தேசிய அளவில் ‘ஸநாதன தர்ம பாதுகாப்பு [ரக்ஷனா] வாரியம்’ என்ற அமைப்பை நிறுவும் நேரம் வந்துவிட்டது என்று தனது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் பவன் கல்யாணின் இந்த கருத்துக்கு திரைக்கலைஞரும், அரசியல் வாதியுமான பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில்,
‘‘இந்த விவகாரம் நீங்கள் துணை முதலமைச்சராக உள்ள மாநிலத்தில் நடந்துள்ளது. உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கும் வழியைப் பாருங்கள். அதைவிட்டுவிட்டு ஏன் இந்தப் பிரச்சினையை தேசிய அளவில் ஊதி பெரிதாக்கி அச்சத்தைப் பரப்புகிறீர்கள். நாட்டில் ஏற்கெனவே போதுமான அளவு வன்முறைகளும், பதற்றமும் மலிந்துள்ளது [அதற்கு ஒன்றியத்தில் ஆட்சி புரியும் உங்களின் நண்பர்களுக்கு நன்றி]’’ என்று பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *