பா.ஜ.க. ஆட்சியின் இலட்சணம் பாரீர்!

Viduthalai
3 Min Read

தாழ்த்தப்பட்டவர்கள்மீதான வன்கொடுமைகள் 97 விழுக்காடு அதிகரிப்பு!

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் மிக அதிகம்!

புதுடில்லி, செப். 23 கரோனாவிற்குப் பிறகான காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் மீதான அடக்குமுறைகள் 97 விழுக்காடு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்களின்மூலம் தெரிய வந்துள்ளன.

ஒன்றிய அரசே ஒப்புதல்

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் நடந்திருப்பதாக ஒன்றிய அரசு வெளி யிட்ட புதிய அறிக்கையின்மூலம் தெரியவந்துள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகங்களிற்கு எதிரான குற்றங்களில், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகள் தொடா்பாக ஒன்றிய அரசு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டில், தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு (எஸ்.சி.) எதிரான வன்கொடுமை குற்றங்களுக்காக 51,656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 12,287 வழக்குகள் (23.78 சதவீதம்) பதிவாகியுள்ளன. அதற்கடுத்து, ராஜஸ்தானில் 8,651, மத்தியப் பிரதேசத்தில் 7,732, பீகாரில் 6,799, ஒடிசாவில் 3,576, மகாராட்டிரத்தில் 2,706 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த வழக்குகளில் இந்த 6 மாநிலங்கள் மட்டுமே கிட்டத்தட்ட 81 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
பழங்குடியினருக்காக (எஸ்.டி.) பதிவு செய்யப்பட்ட 9,735 வழக்குகளில், அதிகபட்சமாக 2,979 (30.61 சதவீதம்) வழக்குகள் மத்தியப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான் (2,498), ஒடிசா (773), மகாராட்டிரம் (691), ஆந்திரம் (499) உள்ளன.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினா் தொடா்பான 60.38 சதவீத வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 14.78 சதவீத வழக்குகள் தவறான புகார்கள் அல்லது ஆதாரங்கள் இல்லாத காரணங்களால் இறுதி அறிக்கைகளுடன் முடித்து வைக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டின் இறுதியில், 17,166 வழக்குகளில் விசாரணை நிலுவையில் இருந்தது.

குற்றப்பத்திரிகைத் தாக்கல்!
பழங்குடியினா் தொடா்பான 63.32 சதவீத வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 14.71 சதவீதம் இறுதி அறிக்கைகளுடன் முடிவ டைந்தன. 2,702 வழக்குகளில் விசாரணை நிலுவையில் இருந்தது.
இந்த வழக்குகளில் தண்டனை விகிதம் குறைந்து வருவது அறிக்கையில் கவலையளிக்கும் போக்காக உள்ளது. கடந்த 2020 இல் 39.2 சதவீதமாக இருந்த தண்டனை விகிதம் அறிக்கை வெளி யாகியுள்ள 2022 இல் 32.4 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விரைவாக நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதி மன்றங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 14 மாநிலங்க ளில் உள்ள 498 மாவட்டங்களில் 194 மாவட்டங்கள் மட்டுமே சிறப்பு நீதி மன்றங்களை நிறுவியுள்ளன. அதேபோல, 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே வன்கொடுமை நடைபெறும் பகுதிகளை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுத்து வருகின்றன.

உ.பி.யில் அதிக வன்கொடுமைகள்!
எடுத்துக்காட்டாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் வன்கொடுமைகள் நடக்கும் பகுதிகள் என எதுவும் கண்ட றியப்படவில்லை. ஆனால், அங்கு அதிக வன்கொடுமை வழக்குகள் பதிவாகி யுள்ளன.
ஆந்திரம், அசாம், பீகார், சத்தீஸ்கா், குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜாா்க்கண்ட், கருநாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மகா ராட்டிரம், மேகாலயம், மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சண்டீகா், டில்லி, ஜம்மு-காஷ்மீா், லடாக் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்
எஸ்.சி., எஸ்.டி. பாதுகாப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பீகார், சத்தீஸ்கா், ஜார்க்கண்ட், கேரளம், மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் தொடா்பான புகார்களைப் பதிவு செய்வதற்கு சிறப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்…
ஏற்கெனவே பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் மிகவும் அதிக அளவு நடந்துகொண்டு இருக்கும் நிலையில், தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மக்கள் தொகையில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியின சமூகத்தவர்கள் 40 விழுக்காடு உள்ளனர். அதே போல் மக்கள் தொகையில் பெண்கள் பாதி யாக உள்ளனர். இந்த அறிக்கையில், பா.ஜ.க.வின் ஆட்சியில் பெரும் சமூகமே மதம் மற்றும் ஜாதி வெறி–; அதேபோல் பாலின பாகுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்த வழக்கு விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *