மும்பை பகுத்தறிவாளர்கள் – தமிழர் தலைவருடன் சந்திப்பு

1 Min Read

மகாராட்டிரா மாநிலத்தின் பகுத்தறிவாளர் மறைந்த நரேந்திர தபோல்கரின் மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தின் களப்பணியாளர் ரூபாலி ஆர்டே, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்து, அவ்வமைப்பின் சார்பாக மராத்தி மொழியில் வெளிவரும் ”அந்திரஷேத்ர நிர்மூலன் சமிதி” (மூடநம்பிக்கை ஒழிப்பு) மாத இதழை வழங்கினார். அவ்விதழின் ஆசிரியர் ராகுல் தோரட், பேராசிரியர் அசோக் கதம் ஆகியோர் ஆசிரியரிடம், நரேந்திர தபோல்கரின் மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். உடன் திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன், துணைப்பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மும்பை பகுத்தறிவாளர் கழக தலைவர் இரவிச்சந்திரன் உள்ளனர். (பெரியார் திடல், 20.9.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *