பெரியாரை நினைப்போம் என்றும்!!-பாவலர் கருமலைத்தமிழாழன்

1 Min Read

மூத்திரப்பை கையேந்தி ஊர்ஊ ராக
மூடத்தை ஓட்டிக்கால் வெட்டி யவன்நீ!
ஆத்திகர்கள் பின்னிவைத்த சூழ்ச்சி வலையை
அறிவென்னும் கத்தியாலே அறுத்த வன்நீ!
சாத்திரங்கள் எல்லாமே புளுகு மூட்டை
சாய்த்துவிடும் எனஉண்மை உணர்த்தி யவன்நீ!
சூத்திரர்கள் எனகுனிய வைத்த முதுகை
சுரணையூட்டி நிமிர்த்திநிற்க வைத்த வன்நீ!
நீவந்த பின்னால்தான் எங்கள் வீட்டில்
நின்றிருந்த பழமைகளும் எரியக் கண்டோம்!
நீவந்த பின்னால்தான் எங்கள் நெஞ்சில்
நியாயத்தின் நினைவுகளும் எழும்பக் கண்டோம்!
நீவந்த பின்னால்தான் இந்த நாட்டில்
நின்றமூடம் முடமான காட்சி கண்டோம் !
நீவந்த பின்னால்தான் தாழ்ந்தி ருந்தோர்
நிமிர்ந்துதலை நடக்கின்ற துணிவு கண்டோம்!
சிந்தனையைத் தூண்டிவிட்டே அறிவால் எந்தச்
சிறுவினையும் செய்கவென்றே முழக்க மிட்டு
இந்நிலத்தில் பகுத்தறிவுப் பாதை வெட்டி
இருக்கின்ற சூத்திரர்க்கே உணர்வை ஊட்டி
மந்தையென வாழ்ந்தோர்க்கு மதியை ஈந்து
மறுமலர்ச்சி வரலாற்றை புதிதாய் ஆக்கித்
தந்திட்ட பெரியாரை நாம்ம றந்தால்
தலைநிமிர்ந்த நாம்மீண்டும் தாழ்ந்து போவோம் !

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *