திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் – கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பலகலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் யசோதா சண்முகசுந்தரம் இணையரின் 99-89ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னை செனாய் நகர் திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் 18.9.2024 அன்று நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேராசிரிய இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஜப்பானிலிருந்து அனுப்பிய வாழ்த்துச் செய்தியினையும் வழங்கினர் (சென்னை, 18.9.2024).
தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பரமத்தி வேலூர் முத்துசரவணன் உடல் கொடை செய்வதற்கான பத்திரத்தை பொத்தனூர் க.சண்முகம் அவர்களிடம் வழங்கினார்.
காவாங்கரையில் சமத்துவம் கால்பந்தாட்டக் குழுவின் சார்பாக நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா (17.9.2024) கொண்டாட்டம்
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி (17.9.2024) மன்னை நாராயணசாமி செவிலியர் கல்லூரி மாணவிகள் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்றனர்.