மேதினி மலர்ந்ததம்மா!

1 Min Read

அய்யா பிறந்தார்! – பெரியார்
அய்யா பிறந்தார்!! – எங்கும்
அறிவொளி படர்ந்ததம்மா!
மெய்யை உரைத்தார்! – அவர்
மெய்யால் உழைத்தார்!! – இந்த
மேதினி மலர்ந்ததம்மா!!

இல்லை மதமே! -அது
தொல்லை தருமே! – உன்
வெள்ளை மனமே! – அதில்
வீழக் கெடுமே!! (இல்லை)

சாதி உணர்வே! – அது
சாய்க்கும் குணமே! – கல்வி
ஓதி உணர்ந்தால் – நன்மை
ஓங்கி வருமே! நன்மை
ஓங்கி வருமே!!

என்றே மொழிந்தார்! – அதில்
நின்றே நடந்தார்! – வெற்றி
கண்டு மகிழ்ந்தார்! – நம்
கண்ணில் நிறைந்தார்!!
கடவுள் படைப்போ? – நாம்
கடைகீழ் பிறப்போ? – அந்த
மடமை உடைப்போம் -எங்கும்
மனிதம் வளர்ப்போம்!(கடவுள்)

என்ன சதியோ? – மனு
சொன்ன விதியோ? – அது
இன்னுந் தடையோ? – பெரியார்
ஒன்றே விடையோ? – பெரியார்
ஒன்றே விடையோ?

ஞானம் விதைத்தார்! – அதில்
மானம் விளைத்தார்!! – நெஞ்சின்
ஊனம் களைத்தார்!! – நம்மின்
ஈனம் வெளுத்தார்!

பொன்னின் நிறந்தான் – கருத்து
பொழியும் மழைதான் – பெரியார்
இன்னல் துடைத்தே – தரும்
இன்பம் மலைத்தேன்!
இன்பம்….. மலைத்தேன்!!

எண்ணம் சிறக்கும்! வாழ்வில்
ஏற்றம் பிறக்கும் – பெரியார்
மண்ணில் பிறக்கும் மங்கை
மாண்பு சிறக்கும்!
மாண்பு…. சிறக்கும்!

நாளை தொழுமே! உலகம்
நாளுந் தொழுமே!! – பெரியார்
ஆளும் உலகில் – பொதுமை
நீளும் நிதமே!!

– பாவலர் சுப முருகானந்தம்
மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *