எப்படி இருக்கிறது கா(லி)வி ஆட்சி?

Viduthalai
1 Min Read

கருஞ்சட்டை

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் பிள்ளையார் சிலை ஊர்வ லத்தின் போது இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இம்மோதலில், இஸ்லாமியர்கள் தாக்கியதாக வதந்தி பரவியது.
ஆனால், அது பிள்ளையார் சிலையை சுமந்துகொண்டு வந்த இரண்டு குழுக்களி டையே நடந்த மோதல் என்று ரத்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் லோதா கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்
ரத்லம் பகுதியில், பிள்ளையார் சிலை ஊர்வலத்தில் நடந்த மோதல் தொடர்பாக அவர் ஊடகங்களிடம் பேசும் போது, நாங்கள் நிகழ்விடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை முழுமையாக சோதனை செய்தோம் அதில் எந்த ஒரு கல்வீச்சும், வெளிநபர்கள் தாக்குதலும் நடக்கவில்லை; ஊர்வலத்தில் சென்றவர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டனர்.
இந்த மோதல் தொடர்பாக 11 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 100 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்.

நள்ளிரவில் அனைத்து மோதல்களையும் முடிவிற்குக் கொண்டுவந்துவிட்டோம். இங்கு இரண்டு மதப்பிரிவினர்களுக்கு இடையே மோதல்கள் இல்லை. ஹிந்து – முஸ்லீம் வன்முறை என்ற வந்ததிகளை யாரும் நம்பவேண்டாம் என்று கூறியிருந்தார்.
ஊர்வலம் சென்றவர்களுக்குள் ஏற்பட்ட மோதலைத் தடுத்து நிறுத்தி, மத மோதல் இல்லை என்று கூறிய மாவட்ட கண்காணிப்பாளர் ராகுல் லோதா ஊடகத்தில் பேட்டி கொடுத்த சில மணி நேரங்களிலேயே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

எப்படி இருக்கிறது பி.ஜே.பி. – காவி ஆட்சி பார்த்தீர்களா?
‘‘பாவம் ஒரு பக்கம் – பழி வேறொரு பக்கம்!’’ என்று வைதீக சிகாமணிகள் கூறுவார்கள் – அது எப்படியோ இருந்து தொலையட்டும்!
காவல்துறை கடமையைச் செய்ததற்காக காவிகளின் ஆட்சி அவரைத் தண்டிக்கிறது என்றால், இந்தக் காவிகளைத் தண்டிப்பது மக்கள் கையில்தான்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *