அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறன் மதிப்பீட்டுத் தேர்வு: தேதிகள் அறிவிப்பு

viduthalai
2 Min Read

சென்னை, செப்.17- அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கற்றல் திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு; தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாநிலக் கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது;

“தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீட்டுப் புலம் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரு கிறது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது கற்றல் திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நடப்புக் கல்வி யாண்டில் அக்டோபர் முதல் ஜனவரி வரை 4 மாதங்கள் நடை பெறவுள்ள தேர்வுகளின் கால அட்டவணை தற்போது வெளியிடப் பட்டுள்ளது. அதில் முதல்கட்டத் தேர்வு அக்டோபர் 7 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கான வழி காட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட் டுள்ளன.

தேர்வுக்கான வினாத்தாள் மாநில மதிப்பீட்டு புலம் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும். இதையடுத்து தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக அந்த வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வினாத்தாள் பதிவிறக்கத்தில் சிக்கல் ஏற்பட்டால் 14417 என்ற உதவி மய்ய எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

ஒவ்வொரு தேர்வும் 40 நிமி டங்களில் முடிக்கும் வகையில் 25 கொள்குறி வகை வினாக்களை கொண்டிருக்கும். மாணவர்களுக்கு தனித்தனியாக அச்சடித்த வினாத் தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அந்தத் தாள்களிலேயே மாணவர்களை குறிப்பிடச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை திருத்திவிட்டு, அதை வகுப்பு ஆசிரியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *