அன்றாடம் ரயில் விபத்துகள் ஒரு பக்கம்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அன்றாடம் பாலியல் வன்கொடுமை மறுபக்கம்
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில்

இந்தூர், செப். 17–- கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவ அதிகாரிகளை அடித்து கட்டிப் போட்டு அவர்களுடன் சென்ற உறவுக்காரப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத்தில் இருந்து மீளாத நிலையில் மீண்டும் மத்தியப் பிரதேசத்தில் ராணுவ வீரர் ஒருவர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள காவல் நிலையத்தில் பெண் ஒருவர், ராணுவ வீரராக பணியாற்றி வரும் நபருக்கு எதிராக பாலியல் வன்கொடுமைப் புகாரை அளித்திருக்கிறார்.

அந்த புகாரின்படி, வங்கி ஒன்றில் கடன் பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்த இந்தூரில் உள்ள விடுதி ஒன்றிற்கு வரும்படி அந்த ராணுவ வீரர் பெண்ணிடம் கூறியுள்ளார். இதன்படி, கடந்த 13.9.2024 அன்று அந்த பெண் சென்றிருக்கிறார். அப்போது, அந்த பெண்ணை ராணுவ வீரர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கண்ணாடி ஒன்றையும் திணித்துள்ளார். இதனால், காயமடைந்த அந்த பெண் ரத்தம் வழிய மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை அந்த வீரர் மறுத்துள்ளார்.

ஆனால் அந்தப் பெண் படத்தை ஆடையில்லாமல் சித்தரித்து அதைக் காட்டி, அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார் என அந்த பெண் குற்றச்சாட்டாக கூறியிருக்கிறார். இந்த நிகழ்வு பற்றி இந்தூர் மகளீர் காவல் நிலைய அதிகாரி கவுசல்யா சவுகான் கூறும்போது, அந்த ராணுவ வீரர் உத்தரப் பிரதேசம் கிழக்கு பகுதியில் இருந்து வந்தவர்.
அசாமில் இராணுவ வீரராக பணியமர்த்தப்பட்டு உள்ளார். பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

புகாரை தொடர்ந்து, காவல் துரையினர் அந்த ராணுவ வீரரை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ரயில் விபத்தும் பாலியல் வன்கொடுமையும் பிஜேபி ஆளும் மாநிலத்தில் அன்றாட ‘வானவில்’ அறிக்கை!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *