வீடெல்லாம் நாடெல்லாம் ஒலிக்கட்டும் – ‘‘பெரியார் வாழ்க!’’

1 Min Read

பிறக்கவில்லை
பெரியார் என்றால்
இறப்புக் குழியினில்
இனமக்கள் வீழ்ந்திருப்பர்!

பதவி அரசியல் படகினில்
பயணித்திருந்தால்
பார்ப்பனீயத் திமிங்கலம் – நம்மைப்
பசியாறி யிருக்கும்!

அரசியலும் நம்பக்கம்
நடக்கிறது என்றால்
அரசியல் பாதையை
அய்யா துறந்த தனால்!

பாசிசப் பாம்புக்கு
ஒவ்வாமையாக தமிழ்நிலம்
தழைக்கிற தென்றால்
தந்தை பெரியார்தம் கைத்தடியால்!

பெரியார் கொள்கை எனும்
பகுத்தறிவுப் பேராறு
பாய்கிறது எங்கெங்கும் – நாடு
கோடுகளைத் தாண்டியே!

மண்டைச் சுரப்பை
உலகு தொழும் என்றார்
புரட்சிக்கவிஞர் – இன்று
கண்ணில் காண்கிறோம்!

புயலின் பிள்ளைகள்
புறப்பட்டு விட்டார்கள்
வயலில் மண்டிக் கிடக்கும்
வருணாசிரம களையழிக்க…!

வெல்வார் பெரியார்
வெல்லும் வாளெடுப்போம்!
வீடெங்கும் நாடெங்கும்
ஒலிக்கட்டும், ‘‘பெரியார் வாழ்க!’’

– கவிஞர் கலி.பூங்குன்றன் –

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *