விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு?

1 Min Read

புதுடில்லி, செப் 16 நாடு முழுவதும் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1981-ஆம் ஆண்டுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு மேற்கொண்டு வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கரோனா பரவல் காரணமாக அந்தப் பணியை ஒன்றிய அரசு ஒத்தி வைத்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த புதிய தரவுகள் இல்லாததால், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசு துறைகள் கொள்கைகளை வகுத்து மானியங்களை ஒதுக்கீடு செய்து வருகின்றன.

இந்நிலையில் ஒன்றிய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நாடு முழுவதும் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. ஆனால் இந்தக் கணக்கெ டுப்பின் ஒரு பகுதியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற் கொள்வது குறித்து முடிவு எடுக் கப்படவில்லை’ என்றார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலி யுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *