தந்தை பெரியார் பிறந்த நாள் ‘‘சமூக நீதி நாள்’’ உறுதிமொழி ஏற்பு! திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு!

viduthalai
1 Min Read

சென்னை, செப். 16- “தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் ‘‘சமூகநீதி நாளாக’’
கடைப்பிடிக்கப்படும் என்றும்; அப்பிறந்த நாள் அன்று “சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்’’ என தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்கிணங்க தந்தை பெரியார் பிறந்த நாளான 17.9.2024 அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பு, திமுக அமைப்புச் செயலாளர்ஆர்.எஸ்.பாரதி தலைமையில் “சமூகநீதி நாள்” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் திமுக செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, பகுதி, வட்ட திமுக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *