பெரியார் பாலிடெக்னிக்கில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்

1 Min Read

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழா வல்லம், பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பிறந்த நாள் விழாவில் ஒரு நிகழ்வாக 12.09.2024 அன்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து இக்கல்லூரி வளாகத்தில் நடத்திய குருதிக் கொடை முகாமில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு குருதிக் கொடை அளித்தனர்.
தஞ்சாவூர் மருத்துவ இரத்த மய்யம் மருத்துவர் ஆர்.வி.எஸ்.வேல்முருகன் தனது மருத்துவக் குழுவினருடன் இணைந்து குருதிக் கொடை முகாமினை சிறப்பாக நடத்தினார். இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா குருதிக் கொடை முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் துணைமுதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *