பெங்களூர், செப்.15- பெங்களூரில் விநாயகர் சிலைக்கு 4 லட்சம் மதிப் பிலான தங்கச் சங்கிலியை அணிவித்திருந்த நிலையில் அதை மறந்த இணையர், அந்த விநாயகரை நீர் நிலையில் கரைத்து விட்ட நிலையில் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு அந்த நகை மீட்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
கருநாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள விஜயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமையா- உமாதேவி இணையர். இவர்கள் விநாயகர் சதுர்த் தியையொட்டி விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து பூக்களால் அலங்காரம் செய்தனர்.
பிறகு 60 கிராம் எடை கொண்ட, சுமார் 7 பவுன் தங்கச் சங்கிலியை அந்த விநாயகருக்கு அணிவித்தனர். பிறகு பூஜைகளை முடித்துக் கொண்டு 3 நாட்கள் கழித்து பொதுவாக விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இதற்காக பெங்களூரு வில் செயற்கையாக குளம் உருவாக்கப்பட்டு அதில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த நிலை யில் ராமையாவும் அவ ருடைய மனைவியும் தங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த விநாயகர் சிலையை அந்த செயற்கை குளத்தில் போட்டு கரைத் துள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு சென்றதும்தான் விநாயகர் சிலைக்கு அணிவித்திருந்த ரூ 4 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை சிலையி லிருந்து எடுக்காமல் அப்படியே குளத்தில் போட்டது தெரியவந்தது.
இதையடுத்து பதறி அடித்துக் கொண்டு செயற்கை குளத்திற்கு வந்த இணையர், அங் கிருந்த நிர்வாகிகளிடம் விடயத்தை சொன்னார் கள்.
இது தொடர்பாக காவல் துறையிலும் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரியா கிருஷ்ணாவிடமும் புகார் கூறினர்.
இதையடுத்து ராமையா இணையரிடம், “நன்றாக நினைவிருக்கிறதா, இந்த குளத்தில்தான் உங்கள் தங்கச் சங்கிலியை தவற விட்டீர்களா, இல்லை பிள்ளையார் சிலையிலிருந்து எடுத்து வீட்டில் எங்காவது தொலைத்துவிட்டீர்களா” என கேட்டார்.
மேலும் “இந்த நிகழ் வுக்காக தண்ணீரை வெளி யேற்றிவிட்டுத்தான் தேட வேண்டும். அதனால் நினைவுப்படுத்திச் சொல் லுங்கள்” என்றார்.
ராமையா இணையரும் “நன்றாக நினைவிருக்கிறது, நாங்கள் விநாயகர் கழுத்தில் போட்ட நகையை எடுக்கவே இல்லை” என்றனர்.
இதையடுத்து குளத்தில் இருந்த 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு 10 மணி நேரம் கழித்து தங்க சங்கிலி கிடைத்தது.பெங்களூர், செப்.15- பெங்களூரில் விநாயகர் சிலைக்கு 4 லட்சம் மதிப் பிலான தங்கச் சங்கிலியை அணிவித்திருந்த நிலையில் அதை மறந்த இணையர், அந்த விநாயகரை நீர் நிலையில் கரைத்து விட்ட நிலையில் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு அந்த நகை மீட்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
கருநாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள விஜயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமையா- உமாதேவி இணையர். இவர்கள் விநாயகர் சதுர்த் தியையொட்டி விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து பூக்களால் அலங்காரம் செய்தனர்.
பிறகு 60 கிராம் எடை கொண்ட, சுமார் 7 பவுன் தங்கச் சங்கிலியை அந்த விநாயகருக்கு அணிவித்தனர். பிறகு பூஜைகளை முடித்துக் கொண்டு 3 நாட்கள் கழித்து பொதுவாக விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இதற்காக பெங்களூரு வில் செயற்கையாக குளம் உருவாக்கப்பட்டு அதில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த நிலை யில் ராமையாவும் அவ ருடைய மனைவியும் தங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த விநாயகர் சிலையை அந்த செயற்கை குளத்தில் போட்டு கரைத் துள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு சென்றதும்தான் விநாயகர் சிலைக்கு அணிவித்திருந்த ரூ 4 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை சிலையி லிருந்து எடுக்காமல் அப்படியே குளத்தில் போட்டது தெரியவந்தது.
இதையடுத்து பதறி அடித்துக் கொண்டு செயற்கை குளத்திற்கு வந்த இணையர், அங் கிருந்த நிர்வாகிகளிடம் விடயத்தை சொன்னார் கள்.
இது தொடர்பாக காவல் துறையிலும் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரியா கிருஷ்ணாவிடமும் புகார் கூறினர்.
இதையடுத்து ராமையா இணையரிடம், “நன்றாக நினைவிருக்கிறதா, இந்த குளத்தில்தான் உங்கள் தங்கச் சங்கிலியை தவற விட்டீர்களா, இல்லை பிள்ளையார் சிலையிலிருந்து எடுத்து வீட்டில் எங்காவது தொலைத்துவிட்டீர்களா” என கேட்டார்.
மேலும் “இந்த நிகழ் வுக்காக தண்ணீரை வெளி யேற்றிவிட்டுத்தான் தேட வேண்டும். அதனால் நினைவுப்படுத்திச் சொல் லுங்கள்” என்றார்.
ராமையா இணையரும் “நன்றாக நினைவிருக்கிறது, நாங்கள் விநாயகர் கழுத்தில் போட்ட நகையை எடுக்கவே இல்லை” என்றனர்.
இதையடுத்து குளத்தில் இருந்த 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு 10 மணி நேரம் கழித்து தங்க சங்கிலி கிடைத்தது.