சுவிட்சா்லாந்து நடவடிக்கை
புதுடில்லி, செப்.15- அதானி குழுமத்தின் பிரதி நிதியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பண முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக தைவானைச் சோ்ந்தவரின் ரூ.2,610 கோடியை சுவிட்சா்லாந்து முடக்கியுள்ளது.
இதுதொடர்பாக சுவிட்சா்லாந்து ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சுவிட்சா்லாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றின் மூலம், கடந்த 3 ஆண்டுகளில் 5 சுவிட் சா்லாந்து வங்கிக் கணக்குகளில் தைவானைச் சோ்ந்த சாங் சுங் லிங்கின் 310 மில்லியன் டாலா்களுக்கும் (சுமாா் ரூ.2,610 கோடி) அதிகமான தொகை முடக்கப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தொழிலதிபா் கவுதம் அதானியின் பிரதிநிதியாக சாங் சுங் லிங் இருக்கக் கூடும் என்று கருதப்படும் நிலையில், பண முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக இந்தத் தொகை முடக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடா்பான விசாரணைக்கு உள் படுத்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளராக சாங் சுங் லிங் பெயரளவுக்கு மட்டுமே இருந்துள்ளாா். ஆனால், உரிமையாளருக்கான பலன்களை அவா் அனுபவிக்கவில்லை.
குற்றவியல் நீதிமன்ற உத்தரவில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பணம் கையாடல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் அதானி குழுமம் ஈடுபட்டு வருவதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதானி குழுமம் வழங்கிய நிதியில் கணிசமான தொகையை வெளிப்படைத்தன்மையில்லாத நிதியில் சாங் சுங் லிங் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் முதலீடு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தகவலை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் இணைத்து அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் வெளியிட்ட பதிவில், ‘அதானி மீதான பண முறைகேடு மற்றும் பங்கு மோசடி குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, சுவிட்சா்லாந்து வங்கிக் கணக்குகளில் 310 மில்லியன் டாலா்களுக்கும் அதிகமான தொகையை அந்நாடு முடக்கியுள்ளது.
சுவிட்சா்லாந்து குற்றவியல் நீதிமன்ற ஆவணங் களின்படி, கிட்டத்தட்ட அதானி பங்குகளை மட்டுமே வைத்திருக்கும் வெளிநாட்டு நிதி – வெளிப் படைத்தன்மை இல்லாத நிதியில், அதானியின் பிரதிநிதி எப்படி முதலீடு செய்துள்ளாா் என்பதை அரசு தரப்பு வழக்குரைஞா்கள் விவரித்துள்ளதாக சுவிட்சா்லாந்து ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று பதிவிடப்பட்டது.
அதானி குழுமம் மறுப்பு: இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், ‘வெளிநாடுகளில் உள்ள அதானி குழும துணை நிறுவனங்கள் அனைத்து சட்டங்களையும் பின்பற்றி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. தற்போது ஜோடிக்கப்பட்ட மற்றொரு பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஆண்டு குற்றஞ் சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச் சாட்டை ஹிண்டன்பா்க் அண்மையில் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.