கடத்தூர், செப்.14- கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழக, பகுத்தறி வாளர் கழக, விடுதலை வாசகர் வட்ட கலந்துரையாடல் கூட்டம் 13/9/2024 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் கடத்தூர் தமிழ்செல்வி அச்சகத்தில் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் பெ. சிவலிங்கம் தலைமையில் நடை பெற்றது.
அனைவரையும் விடுதலை வாசகர் வட்ட தலைவர் வார் நடராஜன் வரவேற்று பேசினார்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் மு.பிரபாகரன் கடத்தூர் நகரத் தலைவர் இர. நெடுமிடல் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் சொ. பாண்டியன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் கோ.குபேந்திரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு கூட்டத்தின் நோக்கத்தை பற்றி சிறப்புரையாற்றினார்.
விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் கோ. தனசேகரன் பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் அணி பொறுப்பாளர்கள் செந்தில், முருகன், கடத்தூர் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ம. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தந்தை பெரியார் 146 ஆண்டு பிறந்த நாள் விழாவை பட்டித் தொட்டி எங்கும் சிறப்பாக சிறப்பாக கொண்டாடுவது, தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, தந்தை பெரியார் படங்களை வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடுவது என்ன முடிவு செய்யப்பட்டது.
செப்டம்பர் 25ஆம் தேதி திராவிடர் கழக மாணவர் கழகம் சார்பில் கடத்தூரில் நடை பெறும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது எனவும், அக்டோபர் மாதம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தையும், சிறப்பு கருத்தரங்கத்தையும் இணைந்து ஒரு நாள் நிகழ்ச்சியாக மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் மு.பிரபாகரன் பண்ணை தோட்டத்தில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.