திராவிட இயக்க தமிழர் பேரவை ஏற்பாட்டில் அரசியல் பயிலரங்கம்-11

1 Min Read

சென்னை, செப்.14- சென்னை மாவட்ட திராவிட இயக்க தமிழர் பேரவை ஏற்பாட்டில் அரசியல் பயிலரங்கம்-11 சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் 15.9.2024 ஞாயிறன்று காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் 11.15 மணி வரை முதல் அமர்வில் பெரியாரும் இட ஒதுக்கீடும் எனும் தலைப்பில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இரண்டாம் அமர்வில் அறிஞர் அண்ணாவும் மாநில சுயாட்சியும் எனும் தலைப்பில் தன்னாட்சித் தமிழகம் எழுத்தாளர் ஆழி.செந்தில்நாதன், பிற்பகல் 2 மணி முதல் 3.15 மணி வரை மூன்றாம் அமர்வில் கலைஞரும் சமூகநீதியும் எனும் தலைப்பில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை நான்காம் அமர்வில் திராவிட இயக்கமும் தமிழ்த்தேசியமும் எனும் தலைப்பில் திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

முன்பதிவுக்கு 9994113558 கட்டணம் ரூ.100 (மதிய உணவு உண்டு)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *