கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.9.2024

Viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று சென்னையில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் கார் உற்பத்தி ஆலையை தொடங்குகிறது: முதலமைச் சரின் அமெரிக்கப் பயணத்தில் கிடைத்த மாபெரும் வெற்றி என தொழில்துறையினர் கருத்து.

*ஜிஎஸ்டி குளறுபடிகள் குறித்து சுட்டிக்காட்டிய உணவு விடுதி அதிபருக்கு பாஜக மிரட்டல்? மன்னிப்பு கேட்க வைத்த காட்சிப்பதிவு வெளியீடு; ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்; மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* 6 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விடு தலையானார். அமலாக்கத்துறை, சிபிஅய் கைது செய்த 2 வழக்குகளிலும் பிணை கிடைத்துள்ளதால் கெஜ்ரிவால் விடுதலை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் பிரதமர் மோடி சந்திப்பு: இது அவர்களின் பதவிப் பிரமாணங் களை காட்டிக் கொடுப்பதுடன், அரசமைப்பு சட்ட உறுதிமொழிகளையும் குலைக்கிறது என்கிறார் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* சி.பி.அய். கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல் இயங்கக் கூடாது, உச்சநீதிமன்றம் கண்டனம். அமித்ஷா பதவி விலக வேண்டும், ஆம் ஆத்மி வலியுறுத்தல்.

தி டெலிகிராப்:

* அயோத்தியில் ராமன் கோயில் துப்புரவுப் பணியா ளராக பணியாற்றும் கல்லூரி மாணவி மீண்டும் மீண்டும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; எட்டு பேர் கைது

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘உங்கள் பாட்டிக்கு நேர்ந்த கதியை தவிர்க்கவும் அல்லது சந்திக்கவும்’: ராகுலுக்கு பாஜக தலைவர் மார்வா ‘அச்சுறுத்தல்’ தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *