நாடாளுமன்றக் குழுக்களை அமைப்பதில் தாமதம் ஏன்? எதிர்க்கட்சிகள் கண்டனம்!

Viduthalai
1 Min Read

புதுடில்லி, செப். 13– எதிர்க்­கட்­சி­க­ளுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்­டும் என்­ப­தால் துறை வாரி­யான நாடா­ளு­மன்றக் குழுக்­களை அமைப்­ப­தில் ஒன்­றிய அரசு தாம­தம் செய்­வ­தாக காங்­கி­ரஸ் கட்சி புகார் தெரி­வித்­துள்­ளது.

நாடா­ளு­மன்­றத்­தின் முதல் கூட்­டத்­தொ­டர் முடிந்து இரண்டு மாதங்­கள் ஆகி­விட்­டன. இன்­னும் துறை வாரி­யான நாடா­ளு­மன்ற குழுக்­கள் அமைக்­கப்­ப­ட­வில்லை. காங்­கி­ரஸ் கட்­சிக்கு 98 இடங்­க­ளும், ஒட்­டு­மொத்­த­மாக எதிர்­கட்­சி­க­ளின் எண்­ணிக்கை 249 ஆக­வும் உள்­ளது.

இதில் குறைந்­தது 6 துறை­க­ளின் நாடா­ளு­மன்ற குழுக்­க­ளுக்கு எதிர்­க்கட்சி உறுப்­பி­னர்­களை தலை­வர்­க­ளாக நிய­மிக்க வேண்­டும். ஆனால், அதற்­கான நிய­மன அறி­விப்­பு­கள் இன்­னும் வெளி­யா­க­வில்லை. நிதி உள்­ளிட்ட முக்­கிய துறை­களை பா.ஜ.க. வைத்­துக் கொள்ள திட்­ட­மிட்­டு ள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன.

எதிர்க்­கட்­சி­க­ளுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்­டும் என்­ப­தால் துறை வாரி­யான நாடா­ளு­மன்றக் குழுக்­களை அமைப்­ப­தில் ஒன்­றிய அரசு தாம­தம் செய்­வ­தாக காங்­கி­ரஸ் கட்சி புகார் தெரி­வித்­துள்­ளது. உள்­துறை, பாது­காப்பு, வெளி­வு­ற­வுத் துறை­களை வழங்க வேண்­டும் என்று காங்­கி­ரஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இத­னி­டையே மக்களவைத் துணைத் தலைவர் நிய­மன விவ­கா­ரத்­தில் ஒன்­றிய அரசு மவு­ன­மாக உள்­ளது.
எதிர்க்­கட்­சி­க­ளுக்கு வழங்க வேண்­டிய இந்­தப் பத­வியை கடந்த அய்ந்து ஆண்­டு­கள் பா.ஜ.க. அரசு காலி­யா­கவே வைத்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *