புதுடில்லி, செப். 13– எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் துறை வாரியான நாடாளுமன்றக் குழுக்களை அமைப்பதில் ஒன்றிய அரசு தாமதம் செய்வதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் துறை வாரியான நாடாளுமன்ற குழுக்கள் அமைக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 98 இடங்களும், ஒட்டுமொத்தமாக எதிர்கட்சிகளின் எண்ணிக்கை 249 ஆகவும் உள்ளது.
இதில் குறைந்தது 6 துறைகளின் நாடாளுமன்ற குழுக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை தலைவர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், அதற்கான நியமன அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளை பா.ஜ.க. வைத்துக் கொள்ள திட்டமிட்டு ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் துறை வாரியான நாடாளுமன்றக் குழுக்களை அமைப்பதில் ஒன்றிய அரசு தாமதம் செய்வதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. உள்துறை, பாதுகாப்பு, வெளிவுறவுத் துறைகளை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே மக்களவைத் துணைத் தலைவர் நியமன விவகாரத்தில் ஒன்றிய அரசு மவுனமாக உள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டிய இந்தப் பதவியை கடந்த அய்ந்து ஆண்டுகள் பா.ஜ.க. அரசு காலியாகவே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.