சென்னையில் இருதளப் பேருந்துகள் சோதனை ஓட்டம்

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக. 6 – சென்னையில் இரு தளப் பேருந்துகளின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை உள்ளிட்ட பெரிய மாநகரங்களில் 20 ஆண்டுக ளுக்கு முன் இரு தளப் பேருந் துகள் இயக்கப்பட்டன. ஆனால், மேம்பாலங்கள்மற்றும் போக்குவ ரத்து நெரிசல் உள்ளிட்ட கார ணங்களால் இப்பேருந்துகளின் சேவை 2008ஆம் ஆண்டு நிறுத்தப் பட்டன.

இந்நிலையில், வாய்ப்புள்ள இடங்களில் மீண்டும் இரு தளப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள் ளது. இது தொடர்பாக அதிகாரி கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் சேவையைக் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்யப்படுவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த இரு தளப் பேருந்துகளின் சோதனை ஓட்டம் சென்னையில் நடந்து வருகிறது. காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் மின்சார இரு தளப் பேருந்து சோதனை நடைபெற்று வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *