சென்னையில் இருதளப் பேருந்துகள் சோதனை ஓட்டம்

1 Min Read

சென்னை, ஆக. 6 – சென்னையில் இரு தளப் பேருந்துகளின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை உள்ளிட்ட பெரிய மாநகரங்களில் 20 ஆண்டுக ளுக்கு முன் இரு தளப் பேருந் துகள் இயக்கப்பட்டன. ஆனால், மேம்பாலங்கள்மற்றும் போக்குவ ரத்து நெரிசல் உள்ளிட்ட கார ணங்களால் இப்பேருந்துகளின் சேவை 2008ஆம் ஆண்டு நிறுத்தப் பட்டன.

இந்நிலையில், வாய்ப்புள்ள இடங்களில் மீண்டும் இரு தளப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள் ளது. இது தொடர்பாக அதிகாரி கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் சேவையைக் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்யப்படுவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த இரு தளப் பேருந்துகளின் சோதனை ஓட்டம் சென்னையில் நடந்து வருகிறது. காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் மின்சார இரு தளப் பேருந்து சோதனை நடைபெற்று வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *