அய்அய்டி-குவஹாட்டியில் மாணவர் தற்கொலை : முதல்வர் பதவி விலகல்

Viduthalai
2 Min Read

குவஹாட்டி, செப்.13 அய்அய்டி குவஹாட்டியில் பி.டெக். மாணவர் மரணம் தொடர்பாக நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, நிறுவ னத்தின் முதல்வர் பேராசிரியர் கந்துரு வி. கிருஷ்ணா தனது பதவியிலிருந்து விலகினார்.
குவஹாட்டி அய்அய்டியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் பி.டெக். கணினி அறிவியல் படித்துவந்தார். இவர் கடந்த 9.9.2024 அன்று விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரற்றவராக மீட்கப்பட்டதையடுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் கூறுகையில், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற் றாலும், வருகைப்பதிவு குறைவாக இருந்ததால் சுமார் 200 மாணவர்கள் வரை தேர்வில் தோல்வியடைந்துள் ளதாக அறிவித்தனர். இதை ஏற்க முடியாது. ஓரிரு மாணவர்கள் தவறு செய்திருக்கலாம். ஆனால் அதற்காக அனைவரையும் தண்டிப்பது ஏற்க முடியாது. கல்வி என்ற பெயரில் மாணவர்களுக்கு அய்அய்டி-குவஹாட்டி நச்சு சூழலையும் ஒருவித அழுத்தத்தையும் உருவாக்கி வருகின்றது. இந்தாண்டில் இது மூன்றாவது மரணமாகும். ஆகஸ்ட் 9இல் உ.பி.யைச் சேர்ந்த எம்.டெக். மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அய்அய்டியில் படித்த 8,000 மாணவர்களுக்கு
வேலை கிடைக்கவில்லை!

அய்.அய்.டி. நிறுவனங்களில் 2023 – 2024 கல்வியாண்டில் பயின்ற 8,000 மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த கல்வியாண்டில், அய்அய்டியில் பயின்ற மொத்தம் 21,500 மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், 13,410 மாணவர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகங்களில்(அய்.அய்.டி.) பயிலும் மாணவர்களுக்கு பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் அதிக ஊதியத்துக்கு வேலை கிடைக்கும் என்ற பெருமை இருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டில் கல்வியை முடித்தவர்களில் பலருக்கு வேலை கிடைக்காத சூழல் நிலவுகிறது.

 

இதற்கிடையில், மாணவியின் மரணம் குறித்து அய்அய்டி-குவஹாட்டி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், மன அழுத்தத்தைச் சமாளிக்க மாணவர்களுக்கு உதவும் வகையில் தொடர் மனநலத் திட்டங்களும் தொடங்கப்பட்டன. அதற்கு முன்னதாக 20 வயதான பீகாரைச் சேர்ந்த பி.டெக் மாணவரும் ஏப்ரல் மாதம் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணாவின் பதவி விலகலை அய்அய்டி-குவஹாட்டி அதிகாரிகள் கற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *