நில ஆக்கிரமிப்பு உ.பி. பா.ஜ.க. அரசுக்கு ரூ.10 லட்சம் அபராதம் 32 ஆண்டுகளுக்கு பிறகு போராடி மீட்ட விவசாயி

Viduthalai
1 Min Read

கோரக்பூர், செப்.13 விவசாயி ஒருவரின் நிலத்தை ஆக்கிரமித்த வழக்கில் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கும், கோரக்பூா் கத்தோலிக்க திருச்சபைக்கும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து அலாகாபாத் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அரசால் அபகரிக்கப்பட்ட நிலம் விவசாயி போலா சிங்குக்கே சொந் தம் என 32 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீா்ப்புக்கு முன் விவசாயி போலா சிங் உயிரிழந்துவிட்டார்.

கோரக்பூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த விவசாயி போலா சிங்குக்கு சொந்தமான நிலத்தை மாநில அரசு தவறுதலாக கத்தோலிக்க திருச்சபைக்கு குத்தகைக்கு வழங்கியது. இதையடுத்து, அந்த நிலத்தின் உரிமையாளா் போலா சிங் உரிய ஆவணங்களுடன் உள் ளூா் நிர்வாகத்தை அணுகினார். இதனிடையே, அந்த நிலத்தில் சுற்றுச் சுவா் கட்டிய கத்தோலிக்க திருச்சபை நிர்வாகம், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலா சிங்கை மிரட்டியது.

இதையடுத்து, போலா சிங் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தார். 32 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்தபோது, போலா சிங் இறந்து விட்டார். அவரது வாரிசுகள் தொடா்ந்து வழக்கை நடத்தினா். இந்த வழக்கில் 10.9.2024 அன்று தீா்ப்பு வழங்கிய அலாகாபாத் உயா்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நிலம் போலா சிங் மற்றும் அவரது வாரிசுகளுக்கு சொந்தமானது என தீா்ப்பு வழங்கியது.

உத்தரப் பிரதேச அரசும், கத்தோ லிக்க திருச்சபையில் போலா சிங்கின் நிலத்தை தவறுதலாக ஆக்கிரமித்து வைத்துள்ளது என்று தீா்ப்பில் கூறப்பட்டது. உள்ளூா் நிர்வாகம் முதல் தலைமைச் செயலகம் வரை யில் தவறான நில ஆவணமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், இத்தனை ஆண்டுகாலமாக அந்த நிலத்தை உரிமையாளா்கள் பயன்படுத்த முடியாமல் செய்ததற்காக உத்தர பிரதேச மாநிலம் அரசும், கோரக்பூா் கத்தோலிக்க திருச்சபையும் சோ்ந்து போலா சிங்கின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் அபராதத் தொகை வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பில் கூறப் பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *