புதுடில்லி, செப். 12- உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் வாதிட 6 மூத்த வழக்குரைஞா்களை கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்களாக அரசு நியமித்துள்ளது.
இவா்கள் மூன்று ஆண்டு காலம் பதவி வகிக்கவுள்ளனா். இதற்கு ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
எஸ்.துவாரகநாத், அா்ச்சனா பதக் தாவே, சத்ய தா்ஷி சஞ்சய், பிரிஜேந்தா் சாஹா், ராகவேந்திர பி.சங்கா் மற்றும் ராஜ்குமார் பாஸ்கா் தாக்கரே ஆகிய 6 மூத்த வழக்குரைஞா்களை கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்களாக நியமித்து ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு ஆணை வெளியிட்டது.
உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களில் ஒன்றிய அரசு சார்பில் வாதிடும் அட்டா்னி ஜெனரல் மற்றும் சொலி சிட்டா் ஜெனரலுக்கு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்கள் உதவிகரமாக இருப்பா்.
ஏற்கெனவே, உச்சநீதி மன்றத்தில் 5 கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்கள் இருந்துவரும் நிலையில் காலியாக இருந்த 6 பணியி டங்களும் தற்போது நிரப்பப் பட்டுள்ளன.