உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் வாதிட 6 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் நியமனம்

1 Min Read

புதுடில்லி, செப். 12- உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் வாதிட 6 மூத்த வழக்குரைஞா்களை கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்களாக அரசு நியமித்துள்ளது.

இவா்கள் மூன்று ஆண்டு காலம் பதவி வகிக்கவுள்ளனா். இதற்கு ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

எஸ்.துவாரகநாத், அா்ச்சனா பதக் தாவே, சத்ய தா்ஷி சஞ்சய், பிரிஜேந்தா் சாஹா், ராகவேந்திர பி.சங்கா் மற்றும் ராஜ்குமார் பாஸ்கா் தாக்கரே ஆகிய 6 மூத்த வழக்குரைஞா்களை கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்களாக நியமித்து ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு ஆணை வெளியிட்டது.
உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களில் ஒன்றிய அரசு சார்பில் வாதிடும் அட்டா்னி ஜெனரல் மற்றும் சொலி சிட்டா் ஜெனரலுக்கு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்கள் உதவிகரமாக இருப்பா்.
ஏற்கெனவே, உச்சநீதி மன்றத்தில் 5 கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்கள் இருந்துவரும் நிலையில் காலியாக இருந்த 6 பணியி டங்களும் தற்போது நிரப்பப் பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *