இந்தியாவில் குரங்கு அம்மைப் பாதிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, செப்.12- இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 30 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிசெய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் வனப்பகுதியில் உள்ள குரங்குகளில் இருந்து குரங்கு அம்மை பரவியது. இந்த நோய் பாதித்த மனிதர்களின் உமிழ்நீர், சளி மூலமாக மற்றவர்களுக்கும் பரவுகிறது. கரோனா போலவே, குரங்கு அம்மைபாதித்தவர்க ளையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது அவசியம்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒரு வாலிபருக்கு நேற்று முன்தினம் (10.9.2024) குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது.

ஆப்பிரிக்க கண்டத்தை தாண்டி, பல நாடுகளிலும் குரங்கு அம்மை பரவியதால். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி. குரங்கு அம்மையை பன்னாட்டளவில் கவலை ஏற்படுத்தக் கூடிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

30 பேருக்கு தொற்று

அந்த அறிவிப்புக்கு பிறகு, இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் கூறியிருப்பதாவது:-
உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியான 2022ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் 30 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது.

229 பேர் பலி

உலக சுகாதார அமைப்பின் கணக்குப் படி, 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த ஜூலை 31ஆம் தேதி வரை 121 நாடுகளில் மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 48 பேருக்கு குரங்கு அம்மை தாக்கி உள்ளது. 229 பேர் பலி யாகி உள்ளனர்.

கடந்த 1ஆம் தேதி நிலவரப்படி, 15 ஆப்பிரிக்க நாடுகளில் 3 ஆயிரத்து 900 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கோ, புருண்டி, நைஜீரியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *