சென்னை, செப்.12 மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, 3 நாட்கள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங் கியது.
சென்னை சைதாப் பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 28ஆம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச் சிக்கு திருப்பூரில் இயங்கி வரும் பரம்பொருள் அறக் கட்டளையைச் சேர்ந்த சொற்பொழியாளர் மகா விஷ்ணு கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது, ‘மாற்றுத்திறனாளிகளைக் கண் இல்லாமல், கால் இல்லாமல் இறைவன் படைக்கிறார்.
அவ்வாறு பிறப்பதற்கு காரணம், அவர்கள் போன பிறவியில் செய்த பாவ புண்ணியம் தான் காரணம் என்று மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தி அறிவியலுக்கு மாறாக உரையாற்றினார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து ெகாண்ட பார்வையற்ற ஆசிரியர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சொற் பொழிவாளர் மகா விஷ்ணுவின் பேச்சுக்கு கல்வியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற் கிடையே சைதாப்பேட்டை ஜீயர் சந்து பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான விஜயராஜ்(53) என்பவர் கடந்த 6ஆம் ேததி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சொற்பொழிவாளரான மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது புகார் ஒன்று அளித்தார்.
அந்த புகாரின் படி சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் சேட்டு விசா ரணை நடத்தினார். அதில், சொற்பொழிவாளர் மகா விஷ்ணு மாற்றுத்திறனாளி களை இழிவாக பேசி யது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவின் படி 192, 196(1)(ஏ), 352, 353(2), 92(ஏ) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த 7.9.2024 அன்று கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கனவில் சித்தர்கள் கூறியதை தான் நான் பேசினேன் என்று கூறினார். அதைதொடர்ந்து காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே மூட நம்பிக்கை பேச்சாளர் மகா விஷ்ணு மீது தொடர் புகார்கள் வந்ததாலும், இது போல் பல சர்ச்சை காட்சிப் பதிவுகளை தனது யூடியூபில் பதிவு செய்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரணை நடத்த கடந்த 9.9.2024 அன்று சைதாப்பேட்டை காவல்துறையினர் சைதாப் பேட்டை நீதிமன்றத் தில் மனுதாக்கல் செய்திருந் தனர். இந்நிலையில் காவல் துறையினர் தாக்கல் செய்த மனு மீது நேற்று (11.9.2024) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தது. இத னால் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தினர்.
அதனை தொடர்ந்து மகாவிஷ்ணுவிடம் 3 நாள் காவல்துறை விசார ணைக்கு நீதிமன்றம் அனு மதி வழங்கியுள்ளது. மகாவிஷ்ணுவை 7 நாள் விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறை அனுமதி கோரியிருந்த நிலையில் 3 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.