நாகப்பட்டினம், செப்.12- தமிழ்நாட்டு மீனவர்களின் படகு மீது இலங்கைக் கடற்படையினர் கப்பலை விட்டு மோதினர். படகு கடலில் மூழ்கியதில் 4 மீன வர்கள் காயம் அடைந்த னர். ரூ.7 லட்சம் மதிப்பி லான மீன்பிடி உபகரணங்கள் சேதம் அடைந்தன.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் சுனாமி குடியிருப்புப் பகுதியை சேர்ந்தவர் தர்மன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சக்தி வேல்(வயது 40), தேவராஜ் (32), கார்த்திகேயன் (46), சதீஷ் (36) ஆகிய 4 மீனவர்களும் கடந்த 9 ஆம் தேதி செருதூர் பகுதியில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று முன்தி னம் (10.9.2024) மாலை 5 மணி அளவில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு ஒரு கப்பலில் வந்த இலங்கைக் கடற்படை யினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி செருதூர் மீன் வர்களின் பைபர் படகு மீது மோதினர். இதில் செருதூர் மீனவர்களின் பைபர் படகு கடலில் கவிழ்ந்தது.
அப்போது பைபர் படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்ததுடன் கடலில் விரித்திருந்த வலையில் சிக்கித் தத்தளித் தனர். இதையடுத்து காயங்களுடன் இருந்த மீனவர்களை மீட்ட இலங்கைக் கடற்படையினர் தங்களது கப்பலில் ஏற்றினர்.
பின்னர் இலங்கைக் கடற்படை யினர் நடத்திய விசாரணையில், தங்களது எல்லையில்தான் மீன் பிடித்தோம் என்று செருதூர் மீனவர்கள் கூறியதைத் தொடர்ந்து அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மற்றும் காரைக்கால் மீனவர்களிடம் அந்த 4 மீனவர்களையும் ஒப்ப டைத்தனர்.இதனைத்தொடர்ந்து சக மீனவர்கள், காயமடைந்த 4 பேரையும் கரைக்குக் கொண்டு வந்து நாகை ஓரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
ரூ.7 லட்சம் பொருட்கள் சேதம்
இலங்கைக் கடற்படை கப்பல் மோதியதில் செருதூர் மீனவர்க ளின் பைபர் படகில் இருந்த 600 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலைகள், ஒரு வாக்கி டாக்கி, அய்ஸ்பெட்டி, 30 கிலோ மீன்கள், 4 அலைபேசி என ரூ.7 லட்சம் மதிப்பிலான மீன் பிடி சாதனங்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
இதுகுறித்து கீழையூர் கடலோர காவல் குழும காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக் கடற்படையினரின் இந்த செயல் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி
யுள்ளது.