சேலம் அதிமுக புறநகர் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட தலைவாசல் வடக்கு ஒன்றியம் சார்பில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேனாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், ‘‘கருணாநிதி மறைந்த போது அவரது நினைவிடத்திற்கான கோப்பில் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கையெழுத்துப் போடவே இல்லை.
அந்தப் ‘பாவத்தை’ செய்தது நான் தான். வருவாய்த் துறை அமைச்சராக இருந்த நான் தான் அதில் கையெழுத்துப் போட்டேன் ‘‘ என்று பேசியுள்ளார்.
ஓர் உண்மையை அப்பட்டமாக மறைத்திருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையொப்பம் போடாமல் இருந்திருக்கலாம்.
அமைச்சர் உதயகுமார் கையொப்பம் போட்டது எந்த அடிப்படையில்?
உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவின் பேரில்தான் அ.தி.மு.க. அரசு வேறு வழியில்லாமல் ஒப்புதல் அளித்தது.
இதனை ஏன் மறைக்கவேண்டும்?