தமிழ் எழுத்தாளர்கள் நால்வருக்கு சிங்கப்பூர் இலக்கியப ்பரிசு

viduthalai
2 Min Read

சிங்கப்பூர், செப்.11 இவ்வாண்டின் சிங்கப்பூர் இலக் கியப் பரிசுக்கான தமிழ்ப் பிரிவில் எழுத்தாளர்கள் நால்வர் விருது பெற்றனர்.

10.9.2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண் முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

புதினப் பிரிவில் எழுத்தாளர் கனகலதா ‘சீனலட்சுமி’ நூலுக்காக விருது பெற்றார். இவ் விருதை அவர் பெற்றது இது இரண்டாவது முறை.

“பெண்ணியல் சார்ந்த ஓர் உணர்வுத்தளத்தை அழுத்தமாக முன்வைக்கின்றன.” என்று ‘சீன லட்சுமி’ நூலில் இடம்பெற்ற சிறு கதைகளை நடுவர்கள் பாராட்டினர்.

கவிதைப் பிரிவில் கவிஞர் மதிக்குமார் தாயுமானவன் ‘யாமக் கோடங்கி’ கவிதைத் தொகுப் பிற்காகவும், புத்தாக்க இலக்கியப் புதினம் அல்லாத படைப்புப் பிரிவில் எழுத்தாளர் அழகுநிலா ‘அப்பன்’ நூலுக்காகவும் விருது பெற்றனர்.
“இந்தக் கவிதைகளின் இறு திப்பகுதி, தாய் நிலத்தின் அடை யாளத்தை, அதனுடைய வேரின் மணத்தை, அதில் மீந்திருக்கும் நினைவின் அடுக்குகளை, அதன் வழியே நிகழ்ந்துகொண் டிருக்கும் பெரும்பண்பாட்டு அம்சங்களைப் பேசுகின்றன.” என்று நடுவர்கள் ‘யாமக்கோடங்கி’ . கவிதைத் தொகுப்பைப் பாராட்டினர்.

தமிழ்மொழியின் எழுத்து வடிவம், பேச்சு வடிவம் என இரண்டையும் தேவைக்கேற்ப சித் திரிப்பிலும், உரையாடலிலும் கலந்து எழுதப்பட்ட நூல் என்பதால் உணர்வொன்றி வாசிக்க முடிகிறது என்று அழகுநிலாவின் ‘அப்பன்’ நூல் பற்றி நடுவர்கள் குறிப்பிட்டனர்.

‘யாமக்கோடங்கி’ கவிதைத் தொகுப்பு பத்தாண்டுகளின் உழைப்பு என்றார் கவிஞர் மதிக் குமார் தாயுமானவன்.
“ஒரே மேடையில் நான்கு மொழிகளுக்கான இலக்கிய அங் ‘ கீகாரம் வழங்குவது பாராட்டத் – தக்கது,” என்றார் அவர்.
இரண்டாவது முறையாக இவ் விருதைப் பெற்ற அழகுநிலா, “இலக்கியத் துறையில் மேன் மேலும் சிறக்க இவ்விருது ஓர் – உந்துதல் ஆகும். இது எனக்குத் தொடர்ச்சியான பயணம்,” என்று கூறினார்.

இவ்வாண்டிற்கான சிறந்த அறிமுக நூல் விருது, புதினத் தில் தமிழ்ச்செல்வி இராஜராஜ னின் ‘காற்றலையில்’ நூலுக்கு வழங்கப்பட்டது.

சீனம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த அறிமுக நூல் பிரிவில் மூன்று எழுத்தாளர்கள் விருது வென் றனர்.
சிங்கப்பூரின் நான்கு அதிகா ரத்துவ மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் படைப்புகளுக்காக ஈராண்டுகளுக்கு ஒருமுறை இவ்விருது வழங்கப் படுகிறது.
நான்கு மொழிகளில் மொத் கும் 17 பேர் விருது பெற்றனர். சிங் கப்பூர் குடிமக்களுக்கும் நிரந்தர வாசிகளுக்கும் நடத்தப்படும் இப் போட்டியில் ஒவ்வொரு வெற்றியா ளருக்கும் தலா சிங்கப்பூர் $3,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

– கீர்த்திகா ரவீந்திரன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *