வேளாண் பயன்பாட்டு வாகனங்கள் தேவை அதிகரிப்பு

1 Min Read

சென்னை, ஆக.6 – வேளாண்மை வளர்ச்சிக்காக விவசாயிகளுக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் வாயிலாக சிறந்த வாகனங்களை தயாரித்து வழங்கி வரும் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் 2023-2024ஆம் நிதியாண்டில் ஜூலை மாதத்தில் 10,683 டிராக்டர்களை விற்பனை செய்து 14 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த டிராக்டர் சந்தையின் வளர்ச்சி விகிதத்தையும் (மதிப்பீடு 6.4%) விஞ்சியுள்ளது.

விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பிராந்திய ரீதியில் அணுகி அவர்களுக்குத் தேவையானதை உருவாக்கித் தருகி றோம். அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இயந்திர மயமாக்கலில் விவசாயிகளை ஈடுபடுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மூலமாக விவசாயிகளுக்கு தொடர்ந்து உதவுவதோடு அவர்களது வாழ்வில் வளம் சேர்க்கத் துணை புரிவதே நிறுவனத்தின் லட்சியம் என இந்நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *