மகாராட்டிரா : பெற்ற குழந்தைகளின் உடலை சுமந்து சென்ற பெற்றோர்! ஆம்புலன்ஸ் எங்கே போனது?

1 Min Read

மும்பை, செப். 11 மகாராட் டிரா மாநிலம் கட்ச்சிரோலி பகுதியை சேர்ந்த தம்பதியினர், ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் தங்களின் குழந்தைகளின் உடல்களை சுமந்து சென்ற காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குழந்தைகளின் உடல் களை 15 கிலோமீட்டர் தூக்கிச் சென்றுள்ளனர் அந்த பெற்றோர்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சாமியார் ஒருவரிடம் அழைத்துச் சென்று அங்கே அவர்களுக்கு மூலிகை மருந்து வாங்கிக் கொடுத்துள் ளனர்.
ஆனால் உடல் நலத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இத னால் செப்டம்பர் 4-ஆம் தேதி யன்று அந்த குழந்தைகளை ஜிமல்கட்டா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்ெகனவே அந்த குழந் தைகள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தால் அவர்கள் தங்களின் குழந்தைகளின் உடல்களை சுமந்து கொண்டே அவர்களின் கிராமத்திற்கு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் இதில் விரைவாக செயல்பட்டு, அந்த சாமியாரை விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அங்கே குரல் கொடுத்து வருகின்றனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *