தருமபுரி மாவட்டத்தில் தொழில் பூங்கா!

Viduthalai
1 Min Read

ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம்!

தருமபுரி, செப். 10- தருமபுரி மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்க சிப்காட் திட்டமிட்டுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இதன்படி, அதகப்பாடி, தடங்கம், அதியமான்கோட்டை, பால ஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இப்பகுதிகளில் தொழிற்சாலை கள் அமைக்க பல முன்னணி நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் ஆயிரத்து 725 ஏக்கர் பரப்பளவில் இந்த சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
462 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிப்காட் தொழில் பூங்கா மூலம் 18 ஆயிரத்து 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தருமபுரி மாவட்ட தொழில் பூங்காவுக்கு சுற்றுசூழல் அனுமதிக்கோரி ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்ற அமைச் சகத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட் டுள்ளதாக சிப்காட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *