நெம்மேலி தோழர் ரவியின் படத்திறப்பு – நினைவேந்தல்

0 Min Read

மதுக்கூர் ஒன்றியம் நெம்மேலி கழகத் தோழர் ரவி அண்மையில் மறைவுற்றார். மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாராயண சுந்தரம் தலைமையில் மாவட்ட தலைவர் பெ.வீரையன், கழகத் தோழர் ரவியின் உருவப் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.

அவரின் இணையர் பிரேமாவதிக்கு ஆறுதல் கூறி நிதியளிப்பு செய்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜராஜன், தஞ்சை மாவட்ட இணை செயலாளர் வடசேரி ஞான.சிகாமணி, வடசேரி ராமசாமி, வடசேரி ராஜேந்திரன், மதுக்கூர் ஒன்றிய அமைப்பாளர் நாவை.ராதாகிருஷ்ணன், நகரச் செயலாளர் சி.சந்திரசேகரன், நெம்மேலி பெ.சுமத்திரா மற்றும் மதுக்கூர் வடசேரி தோழர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *