மதுக்கூர் ஒன்றியம் நெம்மேலி கழகத் தோழர் ரவி அண்மையில் மறைவுற்றார். மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாராயண சுந்தரம் தலைமையில் மாவட்ட தலைவர் பெ.வீரையன், கழகத் தோழர் ரவியின் உருவப் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
அவரின் இணையர் பிரேமாவதிக்கு ஆறுதல் கூறி நிதியளிப்பு செய்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜராஜன், தஞ்சை மாவட்ட இணை செயலாளர் வடசேரி ஞான.சிகாமணி, வடசேரி ராமசாமி, வடசேரி ராஜேந்திரன், மதுக்கூர் ஒன்றிய அமைப்பாளர் நாவை.ராதாகிருஷ்ணன், நகரச் செயலாளர் சி.சந்திரசேகரன், நெம்மேலி பெ.சுமத்திரா மற்றும் மதுக்கூர் வடசேரி தோழர்கள் பங்கேற்றனர்.