மணிப்பூர் வன்முறை! ‘ஒன்றிய அரசு செயலிழந்து விட்டது’ மாணவர்கள் போராட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இம்பால், செப்.10 மணிப்பூரில் ராக்கெட் தாக்குதலைக் கண் டித்து ஆளுநா் மாளிகை முன்பு மாணவா்கள் போராட்டம் நடத்தினர்.
இம்பாலில் ஆளுநா் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் நோக்கி கண்டன பேரணி நடத் திய மாணவா்களை பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினர்.
மணிப்பூரில் ட்ரோன் (ஆளில்லா விமானம்), ராக்கெட் குண்டு தாக்குல்களைக் கண்டித்து ஆளுநா் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் முன்பு நூற்றுக்கணக்கான மாணவா்கள் நேற்று (9.9.2024) போராட்டம் நடத்தினா்.
மணிப்பூரில் பெரும்பான்மை யாக உள்ள மைதேயி சமூ கத்தினருக்கும், குகி பழங்குடி யினருக்கும் இடையே ஓராண் டுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின தகுதி நிலை கோரும் நிலையில், குகி பழங்குடியினா் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, மோதலுக்கு முக்கிய காரணமாகும்.
கடந்த சில மாதங்களாக மோதல் சற்று ஓய்ந்திருத்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் ட்ரோன் மற்றும் ராக்கெட் குண்டுகளும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் 8 போ் உயிரிழந் தனா். 12 போ் படுகாயமடைந்தனா்.

இந்நிலையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததைக் கண்டித்து ஆளுநா் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் முன்பு நூற்றுக்கணக்கான மாணவா்கள் கூடி போராட்டம் நடத்தினா். வன்முறையை கட் டுப்படுத்தக்கோரி முழக்கங்களை யும் எழுப்பினா். தொடா்ந்து மாணவா்களின் பிரதிநிதிகள் ஆளுநா் எல்.ஆச்சார்யா, என்.பிரேன் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினா். அப்போது, வன்முறையைத் தடுக்கத் தவறிய மாநில காவல் துறை தலைவரை நீக்க மாற்ற வேண்டும், மாநிலத்தில் மாணவா்கள் படிப்பதற்கு உகந்த அமைதியான சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்தனா். மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகா் வன்முறையை முறையாகக் கையாளத் தவறிவிட்டார் என்றும் அவா்கள் குற்றம்சாட்டினா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *