மணிப்பூர் வன்முறை! ‘ஒன்றிய அரசு செயலிழந்து விட்டது’ மாணவர்கள் போராட்டம்

Viduthalai
1 Min Read

இம்பால், செப்.10 மணிப்பூரில் ராக்கெட் தாக்குதலைக் கண் டித்து ஆளுநா் மாளிகை முன்பு மாணவா்கள் போராட்டம் நடத்தினர்.
இம்பாலில் ஆளுநா் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் நோக்கி கண்டன பேரணி நடத் திய மாணவா்களை பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினர்.
மணிப்பூரில் ட்ரோன் (ஆளில்லா விமானம்), ராக்கெட் குண்டு தாக்குல்களைக் கண்டித்து ஆளுநா் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் முன்பு நூற்றுக்கணக்கான மாணவா்கள் நேற்று (9.9.2024) போராட்டம் நடத்தினா்.
மணிப்பூரில் பெரும்பான்மை யாக உள்ள மைதேயி சமூ கத்தினருக்கும், குகி பழங்குடி யினருக்கும் இடையே ஓராண் டுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின தகுதி நிலை கோரும் நிலையில், குகி பழங்குடியினா் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, மோதலுக்கு முக்கிய காரணமாகும்.
கடந்த சில மாதங்களாக மோதல் சற்று ஓய்ந்திருத்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் ட்ரோன் மற்றும் ராக்கெட் குண்டுகளும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் 8 போ் உயிரிழந் தனா். 12 போ் படுகாயமடைந்தனா்.

இந்நிலையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததைக் கண்டித்து ஆளுநா் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் முன்பு நூற்றுக்கணக்கான மாணவா்கள் கூடி போராட்டம் நடத்தினா். வன்முறையை கட் டுப்படுத்தக்கோரி முழக்கங்களை யும் எழுப்பினா். தொடா்ந்து மாணவா்களின் பிரதிநிதிகள் ஆளுநா் எல்.ஆச்சார்யா, என்.பிரேன் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினா். அப்போது, வன்முறையைத் தடுக்கத் தவறிய மாநில காவல் துறை தலைவரை நீக்க மாற்ற வேண்டும், மாநிலத்தில் மாணவா்கள் படிப்பதற்கு உகந்த அமைதியான சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்தனா். மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகா் வன்முறையை முறையாகக் கையாளத் தவறிவிட்டார் என்றும் அவா்கள் குற்றம்சாட்டினா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *