தேவிலால் பேரன் பிஜேபியில் இருந்து விலகல்

1 Min Read

சண்டிகார், செப்.9- மேனாள் துணைப்பிரதமர் தேவிலாலின் பேரன் ஆதித்யா தேவிலால், அரியானா பா.ஜனதாவில் முன்னணி தலைவராக இயங்கி வந்தார். அங்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 5ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் ஆதித்யா தேவிலால் பா.ஜனதாவில் இருந்து விலகி உள்ளார். அவர் நேற்று (8.9.2024) இந்திய தேசிய லோக்தளம் கட்சி யின் மூத்த தலைவர் அபய் சிங் சவுதாலா முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார்.

ஆதித்யா தேவிலால் சிர்சா மாவட்டத் தின் டப்வாலி தொகுதியில் இந்திய தேசிய லோக்தளம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
இந்திய தேசிய லோக்தளத்தில் இணைவதற்கு முன், கட்சியின் மூத்த தலைவரும், தேவிலால் மகனும், மேனாள் முதலமைச்சருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பா.ஜனதாவில் இருந்து ஒரே வாரத்தில் விலகிய தேவிலால் குடும்பத்தின் 2-ஆவது நபர் ஆதித்யா தேவிலால் ஆவார். முன்ன தாக தேவிலாலின் மகனும், அரியானா சிறைத்துறை அமைச்சருமான ரஞ்சித் சவுதாலா வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *