புதுடில்லி, செப்.9- வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஆக்கப்பூர்வத்திற்கும், அழிவிற்கும் சமமாக தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது. ஏதோ ஒரு வகையில் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். ராஞ்சியைச் சேர்ந்த இளைஞர் குணால் கிஷோர், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு இணையதள மோசடியால் 61,000 ரூபாயை இழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
குறிப்பிட்ட இணைய தளத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க முயன்றபோது மோசடி தகவல் தொடர்புக்கு பலியாகிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவ அதிகாரி போல் நடித்து, போலி அடையாள அட்டை மற்றும் ஆவணங்களுடன், வாடகைக்கு தருவதாக கூறி, 61,000 ரூபாய் மோசடி செய்துள்ளார். எனது தொலைபேசி எண்ணைக் கேட்டு, கியூ.ஆர். குறியீட்டை அனுப்பினார்.
பிறகு, என் நம்பிக்கையைப் பெற என் கணக்கில் 1 ரூபாய் அனுப்பினார். அதன் பிறகு, நான் கஷ்டப் பட்டு சம்பாதித்த பணம் எனது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் விரக்தியாக தெரிவித்துள்ளார்.
தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை (DoT), இன்றுவரை நாடு முழுவதும் சுமார் 93,081 சைபர் கிரைம் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும், இதன் மூலம், இந்தியாவில் மோசடி தொடர்பான வழக்குகள் ஆபத்தான அதிகரிப்பை குறிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த மோடி புகார்களில், வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருட்டு, சிம் கார்டு மோசடி, எரி வாயு அல்லது மின்சார இணைப்பு, கே.ஒய்.சி (KYC) புதுப்பித்தல், காலாவதியாகுதல் அல்லது செயலிழக்கச் செய்தல், அரசாங்க அதிகாரி அல்லது உறவினராக ஆள்மாறாட்டம் செய்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பல மோசடி களும் அடங்கும்.
தற்போது வரை, அலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மூலம் 93,081 கோரிக்கைகள் வந்துள்ளதாக தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. அவற்றில், 60,730 கோரிக்கைகள் அலைபேசி அழைப்புகள் மூலமாகவும், 29,325 கோரிக்கைகள் வாட்ஸ்அப் மூல மாகவும், 3,026 கோரிக்கைகள் எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) மூல மாகவும் பெறப்பட்டுள்ளன. உத் தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து அதிகமாக 10,392 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக DoT தெரிவித் துள்ளது.
இதுவரையில், சுமார் 80,209 அலைபேசி அழைப்பு புகார்கள், 5,988 வாட்ஸ்அப் புகார்கள், மற்றும் 997 எஸ்எம்எஸ் புகார்கள் என மொத்தம் 89,970 வழக்குகள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 2,776 அலைபேசிகள், மற்றும் 5,988 வாட்ஸ்அப் கணக்குகள் இன்றுவரை முடக்கப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனமான McAfee தனது முதல் ‘உலகளாவிய மோசடி செய்தி ஆய்வை- (Global Scam Message Study)’ 2023-ல் நடத்தியது. இந்தியர்கள் ஒரு வாரத்தில் சுமார் 1.8 மணிநேரம் மோசடி செய்திகளை அடையாளம் காணச் செலவிடுவதாகவும், ஒவ் வொரு நாளும் சராசரியாக 12 மோசடிகள் அல்லது போலிச் செய்தி களைப் பெறுவதாகவும் ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
மொத்தம் 82 சதவீத இந்தியர் கள் போலி செய்திகளால் ஏமாற்றப் பட்டுள்ளனர். McAfee 64 சதவிகிதம் போலியான வேலை அறிவிப்புகள்/ஆஃபர்கள் மற்றும் 52 சதவிகித வங்கி எச்சரிக்கை செய்திகள் மோசடிகளில் மிகவும் பரவலான வகைகள் என்று தெரிவித்துள்ளது.
McAfee அறிக்கையின்படி, 83 சதவீத குரல் மோசடியால் (அலைபேசி அழைப்பு) பாதிக்கப்பட்டவர்களும், பதிலளித்தவர்களில் பாதி இந் தியர்களும் உண்மையான குர லுக்கும் குளோனுக்கும் உள்ள வித்தியாசத்தை தங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறி யுள்ளனர். மொத்தம் 49 சதவீதம் பதிலளித்தவர்கள், மோசடி செய்தி கள் மிகவும் குறைபாடற்றவை, மிகவும் உறுதியானவை, மேலும் தனிப்பட்ட தகவல்களைக் கொண் டிருப்பதாக நம்புகின்றனர், இதனால் அவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம் என்கின்றனர்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அதன் ஸ்பேம் எதிர்ப்புச் சட்டங் களில் சில மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டும் ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டது.
இந்தியாவில் நிகழும் மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் செய்திகளின் தொடர்ச்சியான எழுச்சியைக் கண்காணிப்பதில் கட்டுப்பாட்டாளர் சிரமப்படுவதால் இது வருகிறது.
நீங்கள் ஏமாற்றப்பட்டதாகவோ அல்லது நிதி மோசடியில் பணத்தை இழந்ததாகவோ சந்தேகப்பட்டால் என்ன செய்வது?
சைபர் கிரைம் ஹெல்ப் லைன் எண் 1930ல் புகாரளிக்கவும்.
https://www.cybercrime.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
https://sancharsaathi.gov.in/sfc/Home/sfc-complaint.jsp இல் உள்ள ‘CHAKSHU’ என்ற போர்ட்டலுக்குச் சென்று, கடந்த 30 நாட்களுக்குள்
ஏதேனும் சந்தேகத்திற்குரிய மோசடித் தகவல் பெறப்பட்டதாகப் புகாரளிக்கவும்
புகாரளிக்க மற்றும் கண்டறிய தொலைத் தொடர்புத் துறையின் குடிமக்களை மய்ய மாகக் கொண்ட முயற்சியான ‘சஞ்சார் சாதி’ போர்ட்டலைப் பார்வை யிடவும்.
அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கவும்.
தற்காப்பு நடவடிக்கைகள்
அடையாளம் தெரியாத அல்லது சந்தேகத்திற்குரிய இணைப் புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.
உரைச் செய்திகள், சமூக ஊடக இடுகைகள் மற்றும் இணைய உலாவி தாவல்களில் பாதுகாப்பற்ற/ஆபத்தான ஹைப்பர்லிங்க்களைத் தடுக்கவும்.
புகழ்பெற்ற மற்றும் நம்பகமான மோசடி பாதுகாப்பு மென்பொருள் மற்றும் பயன்பாடு களைப் பயன்படுத்தவும்.
தொலைபேசி அல்லது இணையத்தில் தெரியாத எந்த நபரின் அறிவுறுத்தல்களையும் உடனடி யாகப் பின்பற்ற வேண்டாம்.
எந்தவொரு செயலையும் எடுத்து OTP, பின், கடவுச்சொல், ஏதேனும் ஆவணங்கள் அல்லது முக்கியமான தனிப்பட்ட விவரங் களைப் பகிர்வது அல்லது வைப் பதற்கு முன் எப்போதும் சிந்தித்து இருமுறை சரிபார்க்கவும்.