தொல்.திருமாவளவன்
கள்ளக்குறிச்சி, செப்.9- தமிழ்நாடு மாணவர் களின் நலனுக்காக கவ லைப்படுகின்றவரை போல ஆளுநர் பேசுவது உண்மை யல்ல, தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்கு வதே ஆளுநரின் நோக்கம் என விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார்.
பின்னர் கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “சென்னை அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற முற்போக்கு சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளை இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்நாட்டின் நிலை எதிர்காலத்தில் கவலைக் குரியதாக வடமாநிலத்தை போல மாறுவதற்கு வாய்ப் புள்ளது.
தமிழ்நாடு அரசு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கல்வி நிலையங்களில் திட்டமிட்டு இது போன்ற அறிவியலுக்கு ஒவ்வாத அரசியலை பேசுவது ஆபத்தானது. ஆகவே இது போன்ற நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாடு ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதை தொடர்கதையாக வைத்துள்ளார். அவருக்கு திமுக அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு முரண்பாட்டை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது.
நல்லெண்ணத்தின் அடிப்படையில் பேசுவது போல அவர் காட்டிக் கொண்டாலும் உண்மை அதுவல்ல. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர் களின் நலனுக்காக கவலைப்படுகிறவரை போல பேசுவது உண்மை அல்ல. திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருகின்றார், அது ஏற்புடையது அல்ல” என்றார்.
இதுதான் பிஜேபி ஆட்சியின் சாதனை
பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி!
மும்பை, செப்.9- அமெரிக்காவில் வட்டிவிகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் 6.8.2024 அன்று பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
அந்தவகையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,017.23 புள்ளிகள் (1.24சதவீதம்) சரிந்தது. இதைப் போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 292.95 (1.17 சதவீதம்) வீழ்ச்சியடைந்தது.
இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.5 லட்சம் கோடிக்கு மேல்இழப்பு ஏற்பட்டு உள்ளது. இது பங்குச்சந்தை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வங்கி வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை!
ஆர்.பி.அய். ஆளுநர் வலியுறுத்தல்
மும்பை, செப்.9- வங்கிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, நிதித் துறையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்.பி.அய்.) ஆளுநா் சக்திகாந்த தாஸ் கேட்டுக் கொண்டார்.
இந்திய தொழில் வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (அய்பிஏ) இணைந்து நடத்திய இருநாள் வங்கிகள் மாநாடு மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சக்திகாந்த தாஸ் பேசியதாவது:
பன்னாட்டு அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் பல்வேறு பணிகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. பெண்களுக்கு உரிய கல்வி வழங்குவது, திறன் மேம்பாடு, பணியிடத்தில் பாது காப்பு, பல்வேறு சமூகத் தடைகளை உடைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பெண்களின் திறமையை நாட்டின் வளா்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நிதித் துறையிலும் பெண்களுக்கு உரிய வாய்ப்பளித்து பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். இதற்காக வங்கிகள் பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.
பெண்கள் பொருளாதாரரீதியாக மேம்படுவதில் தொழில்முனைவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங் களை பெண்கள் நடத்துவது மிகவும் குறைவாக உள்ளது.
தொழில் தொடங்குவதற்கு நிதி கிடைப்பது பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. இந்தப் பிரச்சினைக்கும் வங்கிகள் தீா்வு காண முடியும் என்றார்.