சென்னைக்கும் டில்லிக்கும் ஆலாய்ப் பறக்கும் ஆளுநர்!

1 Min Read

சென்னை, செப்.9- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதி நிறைவடைந்ததும், மறுநாள் ஆகஸ்ட் 1ஆம் தேதி டில்லி சென்றார். 4 நாட்கள், டில்லியில் தங்கியிருந்து சென்னை திரும்பினார்.
ஆனாலும் அவரது பதவி நீட்டிப்பு உத்தரவு டில்லியில் இருந்து வரவில்லை. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 19ஆம் தேதி, 24ஆம் தேதி டில்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் ஆளுநர் ரவி 4ஆவது முறையாக நேற்று (8.9.2024) காலை 6.40 மணிக்கு திடீர் பயணமாக டில்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்த முறை ஒரு நாள் பயணமாக டில்லி செல்லும் ஆளுநர் ரவி, நேற்று (8.9.2024) இரவு 8.20 மணிக்கு அதே விமானத்தில் டில்லியில் இருந்து சென்னை திரும்பினார். ஆளுநர் ரவி தொடர்ந்து டில்லிக்கு பயணம் மேற் கொண்டது, தனது பதவி நீட்டிப்பு உத் தரவை பெறுவதற்காகத்தான் என்று கூறப்படுகிறது.
ஆனாலும், டில்லியில் இருந்து, ஆளுநரின் பதவி நீட்டிப்பு குறித்து, இதுவரையில் எந்தவிதமான தகவ லும் வரவில்லை. இதற்கிடையே தமிழ்நாட் டிற்கு புதிய ஆளுநரை நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரையில், ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக பதவியில் இருப்பார் என்று தெரிகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *