நாகை-இலங்கை கப்பல் சேவை இனி வாரத்தில் 4 நாள் இயக்கம்

Viduthalai
1 Min Read

நாகப்பட்டினம், செப்.9- நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இயக்கப்படும் கப்பலுக்கு போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், வாரத்தில் 3 நாள் மட்டுமே இயக்கப்படும் என்று கப்பல் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
இந்த சேவை எந்தவித இடையூறு மின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பயணிகள் வருகை அதிகரிப்பதால் சனிக்கிழமைகளிலும் கப்பலை இயக்க வேண்டும் என தொடர்ந்து பயணிகள் கோரிக்கை விடுத்தனர். எனவே பயணிகள் கோரிக்கையை ஏற்று வரும் 21ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளிலும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படுவதாக கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *