நாகை-இலங்கை கப்பல் சேவை இனி வாரத்தில் 4 நாள் இயக்கம்

1 Min Read

நாகப்பட்டினம், செப்.9- நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இயக்கப்படும் கப்பலுக்கு போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், வாரத்தில் 3 நாள் மட்டுமே இயக்கப்படும் என்று கப்பல் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
இந்த சேவை எந்தவித இடையூறு மின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பயணிகள் வருகை அதிகரிப்பதால் சனிக்கிழமைகளிலும் கப்பலை இயக்க வேண்டும் என தொடர்ந்து பயணிகள் கோரிக்கை விடுத்தனர். எனவே பயணிகள் கோரிக்கையை ஏற்று வரும் 21ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளிலும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படுவதாக கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *