துர்க், செப். 9- சத்தீஷ்காரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் நடந்த நடன நிகழ்ச்சியில் இரு தரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
சத்தீஷ்காரின் துர்க்மாவட்டத்தின் நந்தினி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஷீத்லா மந்திரில் கடந்த சில நாட்களாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடந்து வந்தன. ஷீத்லா மந்திர் கணேஷ் சமிதி சார்பில் நடந்த இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் கடந்த 6ஆம் தேதி இரவு நடன நிகழ்ச்சி நடந்தது.
அப்போது நடனம் ஆடுவ தில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஆனால் நேற்று முன்தினம் (7.9.2024) இரவு அந்த இரு தரப்பினரும் குழு மோதலில் ஈடுபட்டனர். கம்புகள், கூர்மை யான ஆயுதங்களுடன் பயங்கரமாக தாக்கிக்கொண்ட னர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு பிரிவை சேர்ந்த ஒருவர் படு காயம் அடைந்தார். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச் சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பில் இருந்தும் 15 பேரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசா ரணை நடந்து வருகிறது.
மோதல் நிகழ்வைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிக ரிக்கப்பட்டு உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா வில் நடந்த மோதலில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சத்தீஷ்காரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.